இந்தியா முகத்தில் முட்டையை வீசியுள்ளது... `வருத்தப்படாத மைக்கேல் வாகன்!

by Sasitharan, Jan 20, 2021, 16:52 PM IST

டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் தனது முகத்தில் முட்டையை வீசியுள்ளது என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். பல நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையிலும், இந்திய அணி 4 டெஸ்ட் போட்டியில் இமாலய வெற்றி பெற்றது. 2 - 1 என்ற கணக்கில் வென்றதன் மூலம் தொடரையும் கைப்பற்றியது.



இந்நிலையில், இந்தியா தொடரை வென்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், அடிலெய்ட் டெஸ்டில் இந்தியா அணி தோல்வியடைந்ததும் ஆஸ்திரேலியா இந்த தொடரை வெல்லும் என நான் ஏற்கனவே தெரிவித்தேன். ஆனால், இந்தியா இந்தத் தொடரில் கம்பேக் கொடுக்கும் என ஒருபோதும் நான் நினைக்கவில்லை. இந்தத் தொடரில் பெற்ற வெற்றியின் மூலம் என் முகத்தில் இந்திய வீரர்கள்முட்டையை வீசியுள்ளார்கள் என்றார்.

சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், தாக்கூர் என இளம் இந்திய வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இது அனைத்தும் நல்லதுக்குதான். நான் அதை எண்ணி வருந்தவும் இல்லை. நான் சொன்னது தவறு என்பதில் எனக்கு துளி அளவும் வருத்தம் இல்லை என்றார்.

You'r reading இந்தியா முகத்தில் முட்டையை வீசியுள்ளது... `வருத்தப்படாத மைக்கேல் வாகன்! Originally posted on The Subeditor Tamil

More Cricket News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை