நாடு திரும்பிய உடன் தல தோனியிடம் தரிசனம் பெற்ற ரிஷப்... சாக்ஷி இன்ஸ்டாகிராமில் பதிவு!

by Sasitharan, Jan 27, 2021, 20:03 PM IST

டெஸ்ட் தொடரை முடித்து கொண்டு நாடு திரும்பிய இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பன்ட் தல தோனிடம் தரிசனம் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2- என்ற கணக்கில் இமாலய வெற்றி பெற்றது. இதற்கு இந்திய அணியிள் இளம் வீரர் ரிஷப் பன்டின் அதிரடி ஆட்டமும் தான் காரணம் என்று அனைவரும் அறிந்தது. இதனால், ரிஷப் பன்ட்டை நாடே கொண்டாடுகிறது.

இதற்கிடையே, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதற்கு முன்பிருந்தே, ரிஷப் பன்ட்டை தோனியுடன் ஒப்பிட்டு இந்திய ரசிகர்கள் சிலர் பேச தொடங்கினர். ஒரு சிலர் ஒரு ஜாம்பவானின் இடத்தை எப்படி 23 வயதேயான இளைஞன் நிரப்ப முடியும் என்றும் கொந்தளித்தனர். தோனியுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என்றும் ரிஷப் பன்ட் தெரிவித்தார்.

இருப்பினும், சீனியர் வீரர் என்ற முறையில் தோனியிடம் இருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள தவறியதில்லை பன்ட். தோனியும் ஐ.பி.எல் போட்டிகளின்போது கிடைத்த நேரத்தில் பன்ட்டுக்கு அறிவுரைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இந்தியா திரும்பிய சில தினங்களில் ரிஷப் பன்ட் தோனியைச் சந்தித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை தோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தோனி சாக்ஷி, ரிஷப் பன்ட் மூவரும் இணைந்து எடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

You'r reading நாடு திரும்பிய உடன் தல தோனியிடம் தரிசனம் பெற்ற ரிஷப்... சாக்ஷி இன்ஸ்டாகிராமில் பதிவு! Originally posted on The Subeditor Tamil

More Cricket News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை