பீகாரில் பாஜக தலைவர் மகன் கத்தியால் குத்தி கொலை

by Isaivaani, Oct 9, 2018, 06:44 AM IST

பீகார் மாநிலத்தில் பாஜக தலைவர் கங்கோத்ரி பிரசாத்தின் மகனை அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தில் பாஜக தலைவராக இருப்பவர் கங்கோத்ரி பிரசாத். இவரது மகன் பியூஷ்குமார். இவர் நேற்று இரவு சரண் என்ற மாவட்டத்தில் உள்ள சாப்ரா என்ற பகுதி அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று, பியூஷ்குமாரை வழிமறித்து சுற்றிவளைத்தது. பின்னர், மர்ம கும்பல் வைத்திருந்த கத்தியை கொண்டு பியூஷ் குமாரை சரமாரியாக குத்தி தாக்கினர்.

இதில் பலத்த காயமடைந்த பியூஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அதிகளவில் ரத்தம் வெளியேறியதால், பியூஷ் குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாஜக பிரமுகரின் மகன் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

You'r reading பீகாரில் பாஜக தலைவர் மகன் கத்தியால் குத்தி கொலை Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை