ஜமியா போராட்டம்: போலீசின் கொடுங்கோல் செயல்.. பிரியங்கா காந்தி கண்டனம்

ஜமியா பல்கலைக்கழகத்திற்குள் போலீசார் அத்துமீறி நுழைந்து மாணவர்களை தாக்கியது கொடுங்கோல் நடவடிக்கை என்று பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 4 நாட்களாக பெரிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இருமாநிலங்களிலும் வன்முறை சம்பவங்களும் நடைபெற்றன.

டெல்லியிலும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. நேற்று முன் தினம்(டிச.15) ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. அப்போது அந்த பல்கலைக்கழக விடுதிக்குள் அதிரடியாக நுழைந்த போலீசார், சுமார் 150 மாணவர்களை வெளியே இழுத்து வந்தனர். இதனால், அங்கும் வன்முறை வெடித்தது. மாணவர்களும், போலீசாரும் மாறி மாறி கற்களை வீசினர். நள்ளிரவிலும் டெல்லியில் பதற்றமாக காணப்பட்டது.

இதைத் தொடர்ந்து, டெல்லி மட்டுமின்றி உ.பி.யில் உள்ள அலிகார் பல்கலைக்கழகம், ஐதராபாத்தில் உள்ள மவுலானா ஆசாத் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் நேற்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது நாடு முழுவதும் பரவியது. தமிழகத்திலும் கூட மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், டெல்லியில் நேற்று மாலை 4 மணிக்கு இந்தியா கேட் பகுதியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அங்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வந்தார். அவர் 2 மணி நேரமாக அவரும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் அமர்ந்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்.

அப்போது அவர் கூறுகையில், அரசியலமைப்பு சட்டத்தின் மீது அரசு தாக்குதல் நடத்தியுள்ளது. நாட்டின் ஆன்மா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த நாட்டின் ஆன்மாவே இளைஞர்கள்தான், அவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். நானும் ஒரு தாய்தான். இப்படி போலீசார் தாக்கியது மிகக் கொடுமையானது. பல்கலைக்கழகத்திற்குள் போலீசார் அத்து மீறி நுழைந்து தாக்குதல் நடத்தியது கொடுங்கோல் செயல் என்று கூறினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
farmers-delhi-chalo-protest-march-security-increased-at-haryana-delhi-border
விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம் தீவிரமானது.. எல்லைகளில் போலீஸ் குவிப்பு..
delhi-air-pollution
தீபாவளி பட்டாசுகளால் டெல்லியில் புகைமூட்டம்.. வாகன ஓட்டிகள் அவதி..
a-girl-raped-by-60-year-old-man
டெல்லியில் துணிகரம்.. 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்..!
biker-youtuber-with-nearly-million-followers-arrested-in-murder-case
காதலுக்கு எதிர்ப்பு காதலியின் அண்ணனை போட்டுத் தள்ளிய பைக் ஸ்டண்டர் கைது.
isis-recruitment-two-arrested-from-tamilnadu-and-karnataka
ஐ எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்கள் தேர்வு 2 பேர் கைது
6-year-old-girl-allegedly-raped-by-father-in-delhi
டெல்லியில் 6 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை நீதிமன்றத்தில் தாய் புகார்
youth-congress-burn-tractor-at-delhi-rajpath-raise-slogans
டெல்லி ராஜபாதையில் இளைஞர் காங்கிரசாரின் டிராக்டர் எரிப்பு போராட்டம்..
death-toll-rises-46-north-east-delhi-violence
டெல்லி கலவரத்தில் பலி 46 ஆக அதிகரிப்பு..
sonia-forms-a-team-to-visit-riot-hit-areas
டெல்லியில் கலவரம் நடந்த பகுதியில் மக்களைச் சந்திக்க காங்கிரஸ் கட்சி சார்பில் குழு..
congress-slams-political-interest-litigation
சோனியா மீது எப் ஐ ஆர் போடச் சொல்லுவதா? காங்கிரஸ் வழக்கறிஞர் கொதிப்பு
Tag Clouds

READ MORE ABOUT :