சபரிமலை சென்றதால் உயிருக்கு ஆபத்து? பாதுகாப்பு கோரிய கேரள பெண்கள் மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!

சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ததால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி கேரள பெண்கள் பிந்து, கனகதுர்கா உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் முதன்முதலாக சபரிமலை ஐயப்பனை கேரளாவைச் சேர்ந்த பிந்து, கனகதுர்கா ஆகிய இரு பெண்களும் தரிசித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இந்து அமைப்பினர் நடத்திய போராட்டத்தால் பதற்றம் ஏற்பட்டது.

பிந்து, கனகதுர்கா ஆகியோரின் குடும்பத்தினரும் இருவரின் செயலை ஏற்கவில்லை. வீட்டில் சேர்க்க மாட்டோம் என்று அறிவித்தனர்.

இந்நிலையில் மலப்புரத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்ற கனகதுர்காவை குடும்பத்தினர் சரமாரி தாக்குதல் நடத்தியதில் காயமடைந்தார். இதைத் தொடர்ந்து தங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளனர்.

இருவரின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் மனுவை தாக்கல் செய்துள்ளார். சபரிமலை சென்று வந்தது முதலே தொடர்ந்து மிரட்டல் வருகிறது. சுதந்திரமாக வெளியில் நடமாட முடியவில்லை. உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது. 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.

இந்த மனு மீது உச்சநீதிமன்றம் நாளை விசாரணை நடத்துகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds