டெல்லி நட்சத்திர ஓட்டல் தீ விபத்தில் 17 பேர் பலி - மாடியிலிருந்து குழந்தையுடன் குதித்த பெண்ணும் உயிரிழந்த சோகம்!

17 killed in Delhi star hotel fire.

by Nagaraj, Feb 12, 2019, 11:13 AM IST

டெல்லியில் நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலியானார்கள்.உயிர் தப்பிக்க 3-வது மாடி ஜன்னல் வழியே குழந்தையுடன் கீழே குதித்த பெண்ணும் உயிரிழந்த சோகமும் நடந்துள்ளது.

டெல்லியின் மையப் பகுதியான கன்னாட்பிளேசில் உள்ள ஆர்பிட் என்ற நட்சத்திர ஓட்டலில் இன்று காலை தீப்பிடித்தது. ஓட்டலின் 3-வது மாடியில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. அறைகளில் தூக்கத்தில் இருந்த பலர் தீயில் சிக்கினர்.

25 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 17 பேர் பலியாகினர். காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் சிசிச்சை பெற்று வருகின்றனர்.

தீ விபத்தின் போது உயிர் தப்பிக்க 3-வது மாடியின் ஜன்னல் வழியே தனது கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் கீழே குதித்தார். இதில் உடல் சிதறி இருவரும் பலியான சோகமும் நடந்துள்ளது.

35 அறைகள் கொண்ட இந்த ஓட்டலில் திருமண நிகழ்ச்சிக்காக அனைத்து அறைகளும் ஒரே நபரால் புக் செய்யப்பட்டு விருந்தினர்கள் தங்கியிருந்த போது இந்த சோக தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

You'r reading டெல்லி நட்சத்திர ஓட்டல் தீ விபத்தில் 17 பேர் பலி - மாடியிலிருந்து குழந்தையுடன் குதித்த பெண்ணும் உயிரிழந்த சோகம்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை