பிட் அடிக்க அனுமதி மறுப்பு...165 பள்ளிகளில் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை! –உ.பி.,யில் அவலம்

உ.பி.,யில் பொதுத் தேர்வின் போது ‘காப்பி’ அடிப்பதைத் தடுத்தால் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைந்துள்ளது. 165 பள்ளிகளைச் சேர்ந்த ஒரு மாணவர்கூட தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

உத்தரபிரதேச மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. முன்னதாக, பீகார் உள்ளிட்ட உ.பி மாநில பொதுத் தேர்வில் மாணவர்கள் ‘பிட்’ அடித்துத் தேர்வில் வெற்றி பெறுவதாகப் புகார்கள் எழுந்தன. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதும் மாணவர்கள் தேர்வு அறையில் புத்தகத்தை எடுத்துச் சென்று, தேர்வு எழுதும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர்கள் ’காப்பி’ அடிக்க, ஆசிரியர்களே உதவும் காட்சியும் வெளியானது. விடைத்தாள் திருத்தும் பணியில் மோசடி, வினாத்தாள் வெளியான விவகாரம் என உ.பி., மாநிலத்தின் கல்வித் தரம் அகல பாதாளத்திற்கு சென்றது.

இதையடுத்து, பொதுத்தேர்வு நடவடிக்கையில் பயங்கர கெடுபிடி காட்டியது அம்மாநில பள்ளிக்கல்வித் துறை. தற்போது, வெளியாகியுள்ள தேர்வு முடிவுகளில் அந்த நடவடிக்கை எதிரொலித்திருக்கிறது. பொதுத் தேர்வெழுதிய 165 பள்ளிகளைச் சேர்ந்த எந்தவொரு மாணவர்களும்  தேர்ச்சி பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், 385 பள்ளிகளில் 20 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். புத்தகத்தை வைத்து ‘காப்பி’ அடிக்க அனுமதி வழங்கிய போது 100 சதவீத தேர்ச்சி அடைந்த கௌசாம்பி பகுதியைச் சேர்ந்த 13 பள்ளிகளில் மாணவர்கள் யாரும் தேர்ச்சி பெறவில்லை.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள அம்மாநில பள்ளிக் கல்வி இயக்குநரான வினய் குமார், ’பொதுத் தேர்வின்போது மாணவர்கள் காப்பி அடிப்பதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விளைவாக மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது’ என்றார். தற்போது, வெளியாகி உள்ள தேர்வு முடிவுகளை வேதனை அளிப்பதாகவும், உ.பி.,யின் கல்வித் தரம் மிகவும் மோசமாக உள்ளதாகக் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம் மீது வைரஸ் கிருமி தாக்குதல்..! கூட்டணி அரசுதான் தேவை..! - மகேந்திரா சேர்மன் பளிச்

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds