மகாராஷ்டிராவில் கமாண்டோ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம்: வெளியான பகீர் உண்மை

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நேற்று மாவோயிஸ்ட்டுகளின் கண்ணி வெடி தாக்குதலில் கமாண்டோ படையினர் 15 பேர் உட்பட மொத்தம் 16 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு நடந்த சம்பவத்துக்கு பழிக்கு பழியாக மாவோயிஸ்ட்டுகள் நேற்று தாக்குதலை நடத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலம் உருவான தினம் நேற்று கொண்டாடப்பட்டது. மகிழ்ச்சிகரமான அந்த நாளில் அந்த மாநிலத்தை சோகத்தில் ஆழ்த்தும் நிகழ்வு அரங்கேறியது. கட்சிரோலி மாவட்டத்தின் குர்க்கேடா கிராமத்தில் சாலை அமைக்கும் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 27 வாகனங்களை நேற்று அதிகாலை 3 மணிக்கு மாவோயிஸ்ட்டுகள் தீ வைத்து கொளுத்தினர்.

இதையடுத்து அங்கு போலீசாரும், கமாண்டோ படையினரும் விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர். இதில் கிடைத்த தகவலில் பேரில் மாவோயிஸ்ட்டுகள் பிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. இதற்காக குர்க்கேடாவில் இருந்து கோர்சிக்கு கமாண்டோ படையினர் மூன்று வாகனங்களில் புறப்பட்டனர்.

ஜம்பூர்கேடா என்ற மலையோர கிராமத்தை முதல் இரு வாகனங்களும் கடந்து சென்ற நிலையில், சி -60 கமாண்டோ வீரர்கள் 15 பேர் பயணித்த மூன்றாவது வாகனமும் அந்த இடத்தை கடக்க முயன்றது. அப்போது, திடீரென அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியை மாவோயிஸ்ட்டுகள் வெடிக்க வைத்ததில் அந்த வாகனம் வெடித்து சிதறி சுக்கு நூறாகியது. அதில் பயணித்த 15 கமாண்டோ வீரர்களும் ஓட்டுநரும் அந்த இடத்திலேயே பலியாகினர்.

இதையடுத்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கண்ணி வெடி தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்த வீரர்களின் தியாகம் வீண் போகாது என்று கூறியுள்ளார்.

மகாராஷ்ட்ரா மாநிலத்தின் கசான்சூர் கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22 -ஆம் தேதி சி - 60 கமாண்டோ படையினர் நடத்திய தாக்குதலில் மாவோயிஸ்ட் 40 பேர் கொல்லப்பட்டனர். இதன் முதலாமாண்டு நினைவு தினத்தை கடந்த 6 நாட்களாக நக்சலைட்டுகள் அனுசரித்து வந்த நிலையில், துக்கவாரத்தின் கடைசி நாளில் பழிக்கு பழியாக நக்சலைட்டுகள் தாக்குதலை அரங்கேற்றி உள்ளனர் என்று மகாராஷ்ட்ரா மாநில அமைச்சர் சுதிர் முங்கன்திவார் கூறியுள்ளார்.

டெல்லியில் பெண் டாக்டர் கழுத்தறுத்து கொலை: நண்பருக்கு போலீசார் வலை

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds