மீண்டும் ஒரு விமானத்தை காணவில்லை விமானப்படை தீவிர தேடுதல் வேட்டை

Air Force Plane Carrying 13 Missing After Taking Off From Assam

by எஸ். எம். கணபதி, Jun 3, 2019, 17:57 PM IST

அசாமில் இருந்து புறப்பட்டு சென்ற இந்திய விமானப்படை விமானம் ஒன்று, திடீரென்று காணாமல் போய் விட்டது. விமானப்படை தீவிரமாக அந்த விமானத்தை தேடும் பணியில் இறங்கியுள்ளது.

அசாமில் உள்ள ஜோர்காட் தளத்தில் இருந்து, இந்திய விமானப்படை விமானம் 13 பேருடன் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மெச்சுகா என்ற இடத்திற்கு பகல் 12.25 மணிக்கு புறப்பட்டு சென்றது. விமானக் குழுவினர் 8 பேரும், பயணிகள் 5 பேரும் விமானத்தில் சென்றனர். இந்த விமானம் பகல் 1 மணிக்கு பிறகு, கட்டுப்பாட்டு அறை தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டு விட்டது. அதன்பிறகு, விமானப் படையின் கட்டுப்பாட்டு அறை முயற்சித்தும் விமானத்தின் சிக்னல் கிடைக்கவே இல்லை என்று என்.டி.டி.வி. செய்தி தெரிவிக்கிறது

இந்த விமானம் அன்டோனோ ஏஎன்32 என்ற ரகத்தைச் சேர்ந்தது. இந்த ரகம் ரஷ்யத் தயாரிப்பு விமானமாகும். இவை கடந்த 40 ஆண்டுகளாக விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டில் சென்னை விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானுக்கு சென்ற இதே ரக விமானம் காணாமல் போனது. அந்த விமானத்தை நீண்ட காலமாக விமானப்படை தேடி வந்தது. அந்த விமானம் விபத்துக்குள்ளாகி வங்கக்கடலில் விழுந்திருக்கலாம் என்ற அடிப்படையில் கடலில் நீண்டநாட்களாக தேடப்பட்டது. கடைசியில் விமானத்தில் இருந்த 29 பேரும் இறந்து விட்டதாக கருதப்பட்டது.

You'r reading மீண்டும் ஒரு விமானத்தை காணவில்லை விமானப்படை தீவிர தேடுதல் வேட்டை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை