கந்துவா சிறுமி கொலை வழக்கில் 6 பேர் குற்றவாளிகள்: நீதிமன்றம் தீர்ப்பு

கந்துவா சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

கடந்த 2018 ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி, காஷ்மீரின் கத்துவா பகுதியில் 8 வயது முஸ்லிம் பழங்குடியின சிறுமி கடத்தப்பட்டார். கடத்தியவர்கள் அவளை அங்குள்ள கோயில் வளாகத்திற்குள் அடைத்து வைத்து 4 நாட்களாக பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொலை செய்தனர். ஒரு வாரம் கழித்து 17 ம் தேதியன்று சிறுமியின் உடல் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம், தொடர்பாக நாடு முழுவதும் கடும் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டன. பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த வழக்கில் கோயிலின் நிர்வாகியும், முக்கிய குற்றவாளியுமான சஞ்சி ராம், அவரது மகன் விஷால் மற்றும் அவனது நண்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்து திசை திருப்பியதாக சிறப்பு போலீஸ் அதிகாரிகள் தீபக் கஜூரியா மற்றும் சுரேந்தர் வர்மா ஆகியோரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும், தடயங்களை அழிக்க முயன்றதாக தலைமை காவலர் திலக்ராஜ், உதவி ஆய்வாளர் ஆனந்த் தத்தா ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கை பதான்கோட் சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், மாவட்ட செஷன்ஸ் நீதிபதி தேஜ்விந்தர் சிங் இன்று அளித்த தீர்ப்பில் சிறுவன் விஷாலைத் தவிர 6 பேரை குற்றவாளிகள் என கூறியுள்ளார். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் மதியம் 2.30 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds