ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா ஏன்?

ரிசர்வ் வங்கி துணை கவர்னர் விரால் ஆச்சார்யா பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த முறை பா.ஜ.க. ஆட்சியின் போது, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் பதவியை ராஜினாமா செய்தார், இதற்கு மத்திய அரசுக்கும் அவருக்கும் இடையே உள்ள விரிசலே காரணம் . இதையடுத்து, தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே கவர்னர் பதவியில் இருந்து உர்ஜித் படேல் விலகினார். இதையடுத்து, ஐ.ஏ.எஸ். அதிகாரி சக்திகாந்த தாஸ் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டார். பணமதிப்பிழப்பின் போது, மத்திய அரசின் சார்பில் தினந்தோறும் தகவல்களை வெளியிட்டு அரசுக்கு எதிரான பிரச்னைகளை சமாளித்தவர் சக்திகாந்த தாஸ்.

அதனால், அவர் பொறுப்பேற்றதும் மத்திய அரசுக்கு முழு ஆதரவாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே சமயம், உர்ஜித் படேலுக்கு நெருக்கமாக இருந்த துணை கவர்னர் விரால் ஆச்சார்யாவும் பதவி விலகி விடுவார் என்று பேசப்பட்டது.

ஆனால், ஆச்சார்யா தொடர்ந்து பதவியில் நீடித்தார். அதே சமயம், அதற்கு முன்பு ரிசர்வ் வங்கியில் மத்திய அரசின் தலையீடுகள் குறித்து வெளிப்படையாக பேசி வந்தார். புதிய கவர்னர் சக்திகாந்த தாஸ் வந்த பின்பு, மத்திய அரசை விமர்சிக்காத ஆச்சார்யா பெரிய அளவில் வங்கி விவகாரத்தில் தலையிடவும் இல்லையாம்.

இந்நிலையில், அவருக்கு பதவிக்காலம் முடிவடைய இன்னும் 6 மாதங்கள் இருந்தும், ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளார். ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டில் மத்திய அரசின் நடவடிக்கைகள் பிடிக்காமல் ஆச்சார்யா இருந்தார் என்றும், அதனால்தான் அவர் விலகுகிறார் என்றும் செய்திகள் வெளியாயின. இது பற்றி விளக்கம் அளித்த ரிசர்வ் வங்கி நிர்வாகம், ‘‘ஆச்சார்யா தனிப்பட்ட காரணங்களால் ஜூலை 23ம் தேதிக்குப் பிறகு தன்னால் பணியில் இருக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

எனவே, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது’’ என்று தெரிவித்துள்ளது.

ஆச்சார்யா, நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறை பேராசிரியராக பணியாற்றச் செல்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்ன. இதற்கிடையே, அவர் இருந்த துணை கவர்னர் பதவிக்கு ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குனர் மைக்கேல் பாத்ரா அல்லது பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்பால் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும், இன்னொரு துணை கவர்னர் என்.எஸ். விசுவநாதனுக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

4 எம்.பி.க்களை இழுத்த பா.ஜ.க; சந்திரபாபு நாயுடு கடும் அதிர்ச்சி; அடுத்து தமிழகத்துக்கு குறி?

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :