பதவி விலகிய 4 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர் தேர்தலில் போட்டியிட சீட் உறுதி

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவரும், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மூவரும் நேற்று பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் இன்று முதலமைச்சர் பட்நாவிஸ் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தனர்.

மகாராஷ்டிராவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை பலமிழக்கச் செய்ய வேண்டுமென்று பாஜக-சிவசேனா கூட்டணி முடிவெடுத்து செயல்பட்டு வருகிறது. ஏனெனில், அங்கு ஆளும்கூட்டணி மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறது.

இந்நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்த காங்கிரசை சேர்ந்த ராதாகிருஷ்ண பாட்டீல், கடந்த மாதம் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தார். உடனடியாக அவருக்கு பா.ஜ.க. கூட்டணி அரசில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இதேபோல், தேசியவாத காங்கிரசை சேர்ந்த பீட் தொகுதி எம்.எல்.ஏ. ஜெய்தத் சிர்சாகர், சகாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. பாண்டுரங் வரோரா ஆகியோரும் சமீபத்தில் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு சிவசேனாவில் இணைந்தனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மும்பை தலைவர் சச்சின் அஹிரும் சிவசேனாவில் சேர்ந்தார்.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவேந்திர ராஜே போஸ்லே, சந்தீப் நாயக், சித்ராவாக் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் எம்.எல்.ஏ. காளிதார் கோல்ம்கரும் நேற்று சபாநாயகரை சந்தித்து பதவியை ராஜினமா செய்தனர். இதைத் தொடர்ந்து இன்று அவர்கள் முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

இவர்களுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் சீட் தரப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது ஆனால், கட்சி மாறி போட்டியிட்டால் மக்கள் எப்படி ஏற்பார்கள் என்பதுதான் தெரியவில்லை.

அதிமுகவுக்கு கவுரவப் பிரச்னை; வேலூரில் வெற்றி பெறுமா திமுக?

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds