4 பேர் பயங்கரவாதிகளாக அறிவிப்பு: இந்திய நடவடிக்கைக்கு யு.எஸ். ஆதரவு

பாகிஸ்தானைச் சேர்ந்த மசூத் அசார், ஹபீஸ் சயீத், ஜாகீர் ரெஹ்மான் லக்வி, தாவூத் இப்ராகிம் ஆகியோரை பயங்கரவாதிகளாக இந்தியா அறிவித்திருப்பதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில்(உபா) சமீபத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. பழைய சட்டத்தின் கீழ் ஒரு இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து இந்தியாவில் அதன் செயல்பாட்டுக்கு தடை விதிக்கலாம். மேலும், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கலாம். புதிய சட்டத்தின்படி, ஒரு இயக்கத்தை மட்டுமின்றி, தனி ஒருவரைக் கூட பயங்கரவாதியாக அறிவிக்கலாம். அப்படி அறிவித்தால், அவர் மீது எந்நேரத்திலும் நடவடிக்கை எடுக்கலாம்.

இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் மசூத் அசார், ஹபீஸ் சயீத், ஜாகிர் ரெஹ்மான் லக்வி, தாவூத் இப்ராகிம் ஆகியோரை உபா சட்டத்தின் கீழ் பயங்கரவாதிகளாக அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று நோட்டிபிகேஷன் வெளியிட்டது. எனவே, அவர்கள் மீது எந்நேரத்திலும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியும்.

இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலர் ஆலிஷ் வெல்ஸ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். இந்தியாவின் புதிய சட்டம், பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் இந்தியாவுடன் அமெரிக்காவும் இணைந்து செயல்படும் வாய்ப்புகளை அதிகப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல்களிலும் தாவூத் இப்ராகிம் உள்பட 4 பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளது. இவர்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வருகிறது. ஆனாலும், அவர்களை விசாரணைக்கு கொண்டு வருவதற்கு சர்வதேச அளவில் இந்தியா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds