நிலவில் நாளை அதிகாலை தரையிறங்கும் லேண்டர் விக்ரம்.. இஸ்ரோவில் மோடி பார்வையிடுகிறார்

நிலவைச் சுற்றி வரும் லேண்டர் விக்ரம் நாளை அதிகாலை 1.55 மணிக்கு நிலவில் தரையிறக்கப்படுகிறது. இந்நிகழ்வை இஸ்ரோ கட்டுப்பாட்டறையில் இருந்து பிரதமர் மோடி நேரலையில் பார்க்கிறார். அவருடன் பள்ளி மாணவர்களும் கலந்து கொள்கின்றனர்.

இந்திய விண்வெளிக் கழகம்(இஸ்ரோ), நிலவின் தென்துருவப் பகுதியில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவியது. புவி வட்டப் பாதையில் சுற்றி வந்த சந்திரயான்-2, ஆகஸ்ட்2ம் தேதியன்று நிலவின் வட்டப் பாதைக்கு அனுப்பப்பட்டது. நிலவில் இறங்கும் வரை கொஞ்சம், கொஞ்சமாக அதை நெருங்கும் வகையில் அடுத்தடுத்த வட்டப்பாதைகளில் சந்திரயான் இறக்கப்பட்டது.

இதன்பின்னர், சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து லேண்டர் விக்ரம் பிரித்து விடப்பட்டது. தற்போது அது நிலவுக்கு அருகே 35 கி.மீ. தூரத்தில் உள்ள வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. நிலவின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்குவதற்கு சரியான இடத்தை இன்று தேர்வு செய்து மேப் மற்றும் படங்களை இஸ்ரோ கட்டுப்பாட்டறைக்கு அனுப்பும்.
இதைத் தொடர்ந்து, நாளை அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் குறிப்பாக 1.55 மணிக்கு நிலவின் லேண்டர் விக்ரமை தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் ஏற்பாடு வருகின்றனர். லேண்டர் விக்ரம் நிலவில் திட்டமிட்டபடி தரையிறங்குவதை வெற்றிகரமாக முடிக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறார்கள்.

கடந்த ஜூலை 22ம் தேதி சந்திரயான்2, விண்ணில் ஏவப்பட்டது முதல் பெங்களூருவில் உள்ள கட்டுப்பாட்டறையில் விஞ்ஞானிகள் தினமும் 16 மணி நேரம் வேலை பார்த்து வருகின்றனர். சந்திரயான் சுற்றுப்பாதை, அதன் செயல்பாடுகள் ஆகியவற்றை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், லேண்டர் விக்ரம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரில் பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று(செப்.6) இரவு பெங்களூருக்கு வருகிறார். இங்குள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டறையில் விஞ்ஞானிகளுடன் அவர் இந்த நிகழ்வை நேரலையில் பார்வையிடுகிறார். பிரதமருடன் 70 பள்ளி மாணவர்களும் இந்த அற்புத நிகழ்வை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் வருகையை முன்னிட்டு இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நிலவில் லேண்டர் விக்ரம் வெற்றிகரமாக தரையிறங்கி விட்டால், அடுத்து அது நிலவின் மேற்பரப்பில் உள்ள கனிமவளங்கள் மற்றும் இதர அமைப்புகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய உதவியாக இருக்கம். நிலவில் விண்கலத்தை அனுப்பி ஆய்வு செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியா 4வது இடத்தைப் பிடிக்கிறது. ஏற்கனவே சோவியத் ரஷ்யா, அமெரிக்கா, சீனா நாடுகள் நிலவிற்கு விண்கலங்களை அனுப்பியிருக்கின்றன. அதே சமயம், நிலவின் தென்துருவப் பகுதில் முதன்முதலில் ஆய்வு செய்யத் தொடங்கியிருப்பது இந்தியாதான்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds