தெலங்கானாவில் யார் ஆட்சி? குழம்பிய எடிட்டர்ஸ் கில்டு..

ஆந்திராவில் டிவி5, ஏபிஎன் ஆகிய 2 டி.வி. சேனல்கள், கேபிள் டிவியில் இருட்டடிப்பு செய்யும் விவகாரம் இன்னும் ஓயவில்லை. இதற்கிடையே, ஜெகன் அரசை கண்டித்து எடிட்டர்ஸ் கில்டு வெளியிட்ட அறிக்கையில் தவறுதலாக தெலங்கானா என்று குறிப்பிட்டது, சமூக ஊடகங்களில் வைரலாகி விட்டது.

ஆந்திராவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஜெகன்மோகன் தலைமையில் ஆட்சி அமைத்தது.

இதன்பிறகு, ஏற்கனவே பதவியில் இருந்த தெலுங்குதேசம் கட்சியை விடாமல் துரத்தி, துரத்தி அடித்து வருகிறது ஜெகன் அரசு. தற்போது கூட, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வசிக்கும் குடியிருப்பு வளாகம், விதிகளை மீறி கட்டப்பட்டது என்று அதை இடிக்க நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் ஜெகன் அரசை விமர்சித்த டிவி 5, ஏபிஎன் ஆகிய 2 நியூஸ் சேனல்களும் திடீரென கேபிள் டிவி ஒளிபரப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. இதை எதிர்த்து டிவி5 நிறுவனம், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை டிரிபியூனலில் வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணையின் போது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டிவி 5 ஒளிபரப்பு தடைபட்டதாக ஆந்திர அரசு கேபிள் டிவி நிறுவனம் கூறியது. அதை ஏற்காத டிரிபியூனல் உடனடியாக அந்த சேனல் ஒளிபரப்பை துவங்க உத்தரவிட்டது.

டிராய் உத்தரவுப்படி ஒரு சேனல் ஒளிபரப்பை 21 நாளைக்கு முன்பே நோட்டீஸ் ெகாடுத்துதான் நிறுத்த முடியும். தற்போது ஏபிஎன் சேனலும் வழக்கு தொடரப் போவதாக கூறியிருக்கிறது.

இந்த சூழலில், எடிட்டர்ஸ் கில்டு(மீடியா ஆசிரியர்கள் சங்கம்) அமைப்பின் தலைவர் சேகர்குப்தா, செயலாளர் ஏ.கே.பட்டாச்சார்யா, பொருளாளர் ஷீலா பட் ஆகியோர், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசை கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதில், 2 சேனல்களின் ஒளிபரப்பு தடை செய்யப்பட்டதற்கு ஜெகன் அரசு காரணமா என்பதை விளக்க வேண்டும்.

இப்படி தடுப்பது பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படையை தகர்ப்பதாகும் என்று கண்டித்திருந்தனர். ஆனால், ஜெகன் அரசை ஆந்திர அரசு என்று குறிப்பிடாமல் தெலங்கானா மாநில அரசு என்று தவறாக குறிப்பிட்டு விட்டனர். அவ்வளவுதான்... இந்த அறிக்கை தற்போது கேலியும், கிண்டலுமாக சமூக ஊடகங்களில் வைரலாகி விட்டது.

தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சியின் சந்திரசேகர ராவ் ஆட்சி நடைபெறுகிறது. எடிட்டர்ஸ் கில்டு, தப்பான அறிக்கையை திருத்தி மீண்டும் புதிய அறிக்கை வெளியிட்டு விட்டது. ஆனாலும் ஆன்லைன் வாயை மூட முடியுமா?

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds