சபாஷ்! பாதாளச் சாக்கடையை மனிதன் அள்ளுவதற்கு முடிவு கட்டிய கேரளம்

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில், நாட்டிலேயே முதல்முறையாக, ‘ரோபோ’ இயந்திரங்களை அறிமுகம் செய்துள்ளது.

‘பெருச்சாளி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ‘ரோபோ’ இயந்திரங்கள்தான் மார்ச் 2 முதல் கேரளத்தில் பாதாளச் சாக்கடை பணிகளை மேற்கொள்ளப் போகின்றன. நித்தமும் செத்துப் பிழைக்கும் துப்புரவுத் தொழிலாளர்களின் உயிர், இனியும் மலிவாக இருக்க முடியாது என்ற மிக முக்கியமான அறிவிப்பை இதன்மூலம் கேரளா அரசு இந்தியாவுக்கு செய்துள்ளது.

கேரளத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு பதவியேற்றது முதல் சமூகநீதி சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்மையில், கேரளத்தில் உள்ள பொதுக்கோயில்களில் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கும் வரலாற்று முன்னெடுப்பை நிகழ்த்திக் காட்டியது. இது நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது, அந்த வரிசையில் பாதாளச் சாக்கடைகளுக்குள் மனிதர்களை இறக்கும் அவலத்திற்கு கேரள அரசு முடிவு கட்டியுள்ளது. கேரளத்தில் 9 இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று, பாதாளச் சாக்கடை பணிகளுக்கான ‘ரோபோ’ இயந்திரத்தை வடிவமைக்கும் பணியில் சில மாதங்களுக்கு முன்பு ஈடுபட்டது.

இது முதல்வர் பினராயி விஜயன் கவனத்திற்கு வந்தது. அப்போது, அந்தக் குழுவின் முயற்சியை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்று, ஊக்கப்படுத்திய முதல்வர் பினராயி விஜயன், கேரள அரசின் நீர் வாரியம் மூலம் முழுமையான நிதி உதவியையும் ‘ரோபோ’ தயாரிப்புக்கு வழங்குவதாக அறிவித்தார்.

இதன்காரணமாக, கேரளாவில் உள்ள ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான ‘ஜென்ரோபாட்டிக்ஸ், மிகுந்த உற்சாகத்துடன், ‘ரோபோ’ இயந்திர உருவாக்கத்தில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றது. தாங்கள் தயாரித்த ‘ரோபோ’ இயந்திரத்தை வெற்றிகரமாக சோதனை செய்து, தனது ரோபோவுக்கு ‘பெருச்சாளி’ என்ற பெயரையும் சூட்டியது.

இது குறித்து கூறியுள்ள ‘ஜென்ரோபோட்டிக்ஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் விமல் கோவிந்த், “எந்த விதமான பாதாளச் சாக்கடையிலும் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில், இந்த ரோபோ அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோவை ‘வை-பை’, ‘புளூடூத்’, மற்றும் ‘கண்ட்ரோல் பேனல்’ ஆகியவற்றின் மூலம் இயக்க முடியும்; இதில் உள்ள பக்கெட் போன்ற அமைப்பும், துடுப்பு போன்ற அமைப்பும், கழிவுகளை எளிதாக அள்ளி, சுத்தம் செய்யும் என்கிறார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds