பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது - செப்டம்பர் 15க்குள் வின்ணப்பிக்கலாம்

Prime Ministers National Childrens Award - can be applied for by September 15

by Loganathan, Sep 14, 2020, 13:33 PM IST

மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் "பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது " அறிவிக்கப்பட்டு தகுதி வாய்ந்த குழந்தைகள் , தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதிய கண்டுபிடிப்பு , விளையாட்டு , கலை மற்றும் பண்பாடு , சமுக சேவை போன்ற துறைகளில் வீரதீர செயல் புரிந்த குழந்தைகளை அங்கீகரிக்கும் விதமாக " பால சக்தி புரஸ்கார் " விருது வழங்கப்படுகிறது. இவ்விருது ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலை , பதக்கம் , சான்றிதழ் மற்றும் தகுதியுரை புத்தகம் ஆகியவை அளிக்கப்படும்.

குழந்தைகளுக்கான சேவைகளில் தலைசிறந்த பங்களிப்பு செய்யும் தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் விதமாக " பால கல்யாணம் புரஸ்கார் " எனும் தேசிய விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்படும் தனிநபர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் காசோலை , பதக்கம் மற்றும் தகுதியுரை பதக்கம் வழங்கப்படும். நிறுவனங்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கு 5 இலட்சம் ரூபாய் காசோலை , பதக்கம் மற்றும் தகுதியுரை பதக்கம் வழங்கப்படும்.

இதற்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசின் மகளிர் மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளமான www.nca-wcd.nic.in தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இறுதி நாள் 15.09.2020 ஆகும்.

தகுதி பெற்ற விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு குடியரசு தினத்தை ஒட்டிய முந்தைய வாரத்தில் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும்.

You'r reading பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது - செப்டம்பர் 15க்குள் வின்ணப்பிக்கலாம் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை