என்ஐஏ விசாரணை வளையத்தில் அமைச்சர், போர்க்களமான கேரளா

தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக அமைச்சர் ஜலீலிடம் என்ஐஏ விசாரணை நடத்தி வருவதைத் தொடர்ந்து அவர் பதவி விலகக் கோரி கேரளா முழுவதும் நடந்து வரும் போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது.திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் மற்றும் அனுமதியின்றி தூதரகம் வழியாக மத நூல்கள் கொண்டு வந்தது தொடர்பாகக் கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் ஜலீலிடம் கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இன்று காலை முதல் அவரிடம் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக இன்று காலை 6 மணியளவில் அமைச்சர் ஜலீல் கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் ஆஜரானார். 9 மணிக்குத் தொடங்கிய விசாரணை 5 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே அமைச்சர் ஜலீல் பதவி விலகக் கோரி கடந்த சில தினங்களாகக் கேரளா முழுவதும் காங்கிரஸ், பாஜக உட்பட எதிர்க்கட்சியினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அமைச்சர் ஜலீலிடம் என்ஐஏ விசாரணை நடத்தி வருவதைத் தொடர்ந்து போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.

திருவனந்தபுரம், பாலக்காடு, கோட்டயம், கண்ணூர் உள்பட மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல இடங்களில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. போராட்டக்காரர்களை போலீசார் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் விரட்டினர். தடியடி மற்றும் கல்வீச்சில் காங்கிரஸ் எம்எல்ஏ பல்ராம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பும் எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தால் கேரளா முழுவதும் இன்று பெரும் பதற்றம் நிலவுகிறது. அமைச்சர் ஜலீல் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்று கேரள எதிர்க்கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds

READ MORE ABOUT :