உத்தரகண்ட் முதல்வர் ராவத் மீதான சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை .

உத்தரகண்ட் முதல்வரானா திரிவேந்திர சிங் ராவத் பாஜகவின் 2016 ஆம் ஆண்டில் ஜார்கண்ட் மாநில பொறுப்பாளராக அப்போது ராவத் ஒரு ஒப்பந்தம் தொடர்பாக ர25 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் பத்திரிகையாளர் உமேஷ் சர்மா என்பவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க உயர்நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டது. ராவத் முதல்வராவதற்கு முன்பாக லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது விசாரணை நடத்த உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் இரண்டு நாட்களுக்கு முன் அனுமதி அளித்தது. ஆனால் முதல்வர் திரிவேந்திர ராவத்தை விசாரிக்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே இதை தடை செய்ய வேண்டும் என்று முதல்வர் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவதாகவும், உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது என்றும் வேணுகோபால் வாதிட்டார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க அனுமதித்து கடந்த அக்டோபர் 27ம் தேதி உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இந்தக் வழக்கில் எதிர் கட்சிகள் நான்கு வாரங்களில் பதில் தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :