சிபிஎம் தொண்டரால் பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டதில் மனமுடைந்து தீக்குளித்த 16 வயது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக சிபிஎம் தொண்டரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலம் இடுக்கி அருகே நடந்துள்ளது.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை பகுதியைச் சேர்ந்தவர் மனு மனோஜ் (24). சிபிஎம் தொண்டரான இவர் கட்டப்பனை பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். சிபிஎம் மின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திலும் இவர் உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில் இவர் அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியைக் காதலித்து வந்துள்ளார். இந்த மாணவி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை மனு மனோஜ் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக மனு மனோஜ் அந்த சிறுமியைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த சிறுமி பலமுறை போனில் அழைத்தும் அவர் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்த சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டுக் குளியலறையில் வைத்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் பலத்த காயமடைந்த அந்த சிறுமியை முதலில் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் உடல்நிலை மோசமானதால் பின்னர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மனு மனோஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் கட்சியிலிருந்தும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds

READ MORE ABOUT :