நகைக்கடை பங்கு பிரித்து ₹ 200 கோடி மோசடி முஸ்லிம் லீக் எம்எல்ஏ கைது

நகைக் கடையில் பங்குதாரர்களை சேர்த்து பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் ₹ 200 கோடிக்கு மேல் மோசடி செய்ததாகக் கூறப்பட்ட புகாரில் கேரளாவைச் சேர்ந்த முஸ்லீம் லீக் எம்எல்ஏ கமருதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள மஞ்சேஸ்வரம் தொகுதி முஸ்லிம் லீக் எம்எல்ஏவாக இருப்பவர் கமருதீன். கடந்த சில வருடங்களுக்கு முன் இவர் அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் லீக் பிரமுகர்களுடன் சேர்ந்து பேஷன் கோல்ட் என்ற பெயரில் நகைக் கடைகளைத் தொடங்கினார். கண்ணூர் மற்றும் காசர்கோட்டில் மொத்தம் 6 நகைக் கடைகள் திறக்கப்பட்டன.

இந்த கடைகளுக்குப் பங்குதாரர்களாகச் சேர்ப்பதாகக் கூறி பலரிடமிருந்து பணம் வாங்கப்பட்டது. சுமார் 800 பேருக்கு மேல் லட்சக்கணக்கில் இதில் முதலீடு செய்தனர். ஒரு வருடத்தில் அனைவருக்கும் பங்குத் தொகை திருப்பி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் முதலீடு செய்தவர்களுக்கு ஒரு ரூபாய் கூட பணம் திருப்பிக் கொடுக்கப்படவில்லை. இதையடுத்து பண முதலீடு செய்தவர்கள் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே இந்த வழக்கு குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. இதன் பின்னர் நடந்த விசாரணையில் எம்எல்ஏ கமருதீன் தான் இந்த மோசடியில் முக்கிய பங்கு வகித்தார் எனத் தெரியவந்தது. மேலும் 200 கோடிக்கு மேல் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மோசடி செய்த பணத்தில் கமருதீன், எம்எல்ஏ பெங்களூரு உள்படப் பல பகுதிகளில் பெருமளவு நிலத்தை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து இன்று போலீசார் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறினர். பல மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணைக்குப் பின் கமருதீன் எம்எல்ஏவை போலீசார் கைது செய்தனர். முஸ்லிம் லீக் எம்எல்ஏ நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த மோசடி விவகாரம் தேர்தலில் எதிரொலிக்கும் எனக் கருதப்படுகிறது. முஸ்லிம் லீக் கட்சி அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு இந்த விவகாரம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், தங்கக் கடத்தல் வழக்கில் இருந்து திசை திருப்புவதற்காகவே இந்த கைது நாடகம் என்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds