Advertisement

ம.பி. இடைத்தேர்தலிலும் பாஜக அமோக வெற்றி.. ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது..

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற 28 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல்களில் 18ஐ பாஜக பிடித்தது. இதனால் சிவராஜ்சிங் சவுகானின் ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது.மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2018ல் நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக கமல்நாத் பதவியேற்றார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம், காங்கிரசில் இருந்து 22 எம்.எல்.ஏ.க்களை பாஜகவுக்கு இழுத்து, பாஜக ஆட்சியைப் பிடித்தது.

பாஜகவின் சிவராஜ் சவுகான் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு தாவினர். இவர்கள் அனைவருமே, காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்குத் தாவிய ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்கள் கட்சித் தாவுவதற்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால், அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

அதே போல், ஏற்கனவே எம்.எல்.ஏ இறந்து விட்டதால் காலியாக இருந்த 3 தொகுதிகளுக்கும் சேர்த்து மத்தியப் பிரதேசத்தில் 28 தொகுதிகளில் நவ.3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 19 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் 9 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. பாஜக 49.5 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 40.5 சதவீத வாக்குகளையும் பெற்றிருக்கின்றன.மத்தியப் பிரதேச மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜயசிங் கூறுகையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது.

அதாவது, பாஜகவின் வெற்றிக்காகக் குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளைத் தேர்வு செய்து, முறைகேடு செய்திருக்கிறார்கள். காங்கிரஸ் நிச்சயமாக வெற்றி பெறக் கூடிய தொகுதிகளில் ஆயிரக்கணக்கான வாக்குகளை மோசடி செய்து வென்றிருக்கிறார்கள். இது பற்றி நாங்கள் ஆய்வு செய்து ஆலோசனை செய்யவிருக்கிறாம் என்றார்.இந்நிலையில், வாக்கு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என்று வழக்கம் போல் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.

மேலும் படிக்க
free-land-in-kashmir-for-sri-lankan-cricketer-muralitharan-jammu-and-kashmir-government-in-controversy
இலங்கை கிரிக்கெட் வீரர் முரளீதரனுக்கு காஷ்மீரில் இலவச நிலம்: சர்ச்சையில் ஜம்மு காஷ்மீர் அரசு
what-the-police-did-in-the-middle-of-the-road-in-a-bmw
பி.எம்.டபிள்யூவில் வந்து சாலையின் மத்தியில் செய்த காரியம்... தட்டி தூக்கிய போலீஸ்
champions-trophy-betting-alone-is-worth-rs-5-000-crore-mistletoe-caught-in-delhi
சாம்பியன்ஸ் டிராபி : பெட்டிங் மட்டும் 5 ஆயிரம் கோடி டெல்லியில் சிக்கிய புல்லுருவிகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்