தங்கக் கடத்தல் முதல்வரின் அலுவலகத்தில் உள்ள மேலும் சிலருக்கு தெரியும்.. ஸ்வப்னா அதிரடி

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் குறித்து ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் தவிர முதல்வர் அலுவலகத்தில் உள்ள மேலும் சிலருக்கு தெரியும் என்று இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் மத்திய அமலாக்கத் துறையிடம் தெரிவித்துள்ளது. முதல்வர் பினராயி விஜயனுக்கு அடுத்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷுடன் நெருக்கமாக இருந்ததாக புகார் வெளியானதை தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் மத்திய அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது இவர் மத்திய அமலாக்கத் துறையின் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.

முதலில் 7 நாட்களும், பின்னர் 5 நாட்களும் சிவசங்கரை காவலில் வைத்து விசாரிக்க மத்திய அமலாக்கத் துறைக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த விசாரணையில் அமலாக்கத் துறைக்கு பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில தினங்களாக திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்வப்னாவிடமும் சிறையில் வைத்து மத்திய அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் ஸ்வப்னா மேலும் சில முக்கிய விவரங்களை அளித்துள்ளார். இந்நிலையில் சிவசங்கரின் காவல் இன்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து அவரை இன்று அமலாக்கத் துறையினர் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது மத்திய அமலாக்கத்துறை சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறியிருப்பது: ஸ்வப்னாவிடம் நடத்திய விசாரணையில் சில முக்கிய விவவரங்கள் கிடைத்துள்ளன. தங்கக் கடத்தல் குறித்து சிவசங்கர் மட்டுமில்லாமல் முதல்வர் அலுவலகத்தில் உள்ள மேலும் சிலருக்கு தெரியும் என்று அவர் தெரிவித்தள்ளார். எனவே இந்த விவரங்களை உறுதி செய்வதற்காக சிவசங்கரிடம் கூடுதலாக விசாரணை நடத்த வேண்டி உள்ளது. இதனால் சிவசங்கரை மேலும் ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் சிவசங்கரை மேலும் ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க மத்திய அமலாக்கத் துறைக்கு அனுமதி அளித்தது. இந்த விசாரணையில் மேலும் பல முக்கிய விவரங்கள் கிடைக்கும் என கருதப்படுகிறது. தங்க கடத்தல் குறித்து சிவசங்கர் மட்டுமில்லாமல் முதல்வர் அலுவலகத்தில் உள்ள மேலும் சிலருக்கு தெரியும் என்று ஸ்வப்னா கூறியிருப்பது கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :