13 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை 10ம் வகுப்பு மாணவன் மீது வீண்பழி

13 வயது மகளைப் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய கொடூர தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தான் சிக்காமல் இருப்பதற்காக 10ம் வகுப்பு படிக்கும் உறவினரின் மகன் மீது வீண் பழி சுமத்தியதைப் பின்னர் போலீசார் கண்டுபிடித்தனர். கேரள மாநிலம் கண்ணூரில் இந்த சம்பவம் நடந்தது.கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளிப்பறம்பு அருகே உள்ளது கருமாத்தூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மனைவியும், 13 வயதில் ஒரு மகளும் உண்டு. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமியின் தந்தை துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் ஊருக்கு வந்திருந்தார். பின்னர் விடுமுறை முடிந்து கடந்த மாதம் இவர் துபாய் சென்றார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அந்த சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது தாய் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்குப் பரிசோதித்த போது அந்த சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. அதைக்கேட்டு அந்த சிறுமியின் தாய் கடும் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக விசாரித்த போது அப்பகுதியில் வசிக்கும் உறவினர் ஒருவரின் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தான் தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமி கூறினார். இதுகுறித்து தளிப்பறம்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த சிறுவனிடம் விசாரித்தபோது அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை எனத் தெரியவந்தது. அந்த சிறுமி கூறுவதிலும் போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து பெண் போலீசார் உதவியுடன் நடத்திய விசாரணையில் அந்த சிறுமியைப் பலாத்காரம் செய்தது அவரது தந்தை எனத் தெரியவந்தது. வீட்டில் தனது மனைவி இல்லாத நேரத்தில் மகளை மிரட்டி பலமுறை அவர் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக வெளியே தெரிய வந்தால் உறவினரின் மகனின் பெயரைக் கூற வேண்டும் என்று தனது மகளை அவர் மிரட்டி உள்ளார். இதனால் தான் அந்த சிறுமி தந்தைக்குப் பயந்து அந்த சிறுவனின் பெயரைக் கூறியுள்ளார் என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் தந்தை மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை துபாயில் இருந்து கேரளா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds

READ MORE ABOUT :