கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை டெல்லியில் முகக் கவசம் அணியாவிட்டால் ₹ 2,000 அபராதம்

டெல்லியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த டெல்லி அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி முகக் கவசம் அணியாதவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது.

கடந்த சில நாட்களாகத் தினசரி நோயாளிகள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை விடக் குறைந்தது. ஆனால் இன்று காலை வரை 24 மணி நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 45,576 ஆக இருந்தது. 585 பேர் கடந்த 24 மணி நேரத்தில் மரணமடைந்தனர். இதையடுத்து இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,31,578 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 90 லட்சத்தை நெருங்கி விட்டது.

தற்போது இந்தியா முழுவதும் 4,40,00க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 83 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். கொரோனாவின் தொடக்கக் கட்டத்தில் டெல்லியில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. ஆனால் பின்னர் படிப்படியாகக் குறைந்து வந்தது.இந்நிலையில் கடந்த சில தினங்களாக நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாகத் தீபாவளிக்குப் பின்னர் நோய் பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. நேற்று நோயாளிகள் எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது போல மரண எண்ணிக்கையும் டெல்லியில் அதிகரித்து வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தாதது தான் நோய் பரவலுக்கு முக்கிய காரணம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த டெல்லி அரசு தீர்மானித்துள்ளது. மத்திய அரசும், டெல்லி அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் உள்பட வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க டெல்லி அரசு தீர்மானித்துள்ளது. ஏற்கனவே முகக் கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது அபராதத் தொகை 2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :