சமூக இணையதளங்களுக்கு எதிரான அவசர சட்டம்.. கேரளாவுக்கு சிதம்பரம் கடும் கண்டனம்

சமூக இணைய தளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்புபவர்களுக்கு எதிராக கேரளாவில் கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக இணையதளங்களில் தனி நபருக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள், மிரட்டல் விடுப்பவர்களை ஒடுக்கும் வகையில் கேரளாவில் புதிய அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி குற்றம் செய்பவர்களுக்கு 5 வருடம் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். எந்த புகாரும் இல்லாமலேயே போலீசாரால் வழக்கு பதிவு செய்ய முடியும். வாரண்டும் தேவையில்லை. இந்த புதிய அவசர சட்டத்திற்கு கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் நேற்று ஒப்புதல் அளித்தார்.

சமூக இணையதளங்களில் மட்டுமல்லாமல் பத்திரிகைகள் மற்றும் டிவிக்களில் வெளியாகும் கருத்துக்களுக்கு கூட இந்த சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்ய முடியும். இந்த புதிய சட்டத்திற்கு காங்கிரஸ், பாஜக உள்பட கேரளாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கேரள அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை ஒடுக்குவதற்கும், விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதாலும் தான் இந்த புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. ஆனால் இந்த புதிய சட்டத்தால் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும், பத்திரிகைகள் மற்றும் டிவிக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்றும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

சமூக இணையதளங்களில் தேவையில்லாமல் பெண்கள் மற்றும் தனி நபருக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது மட்டுமே இந்த புதிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கேரள அரசின் இந்த புதிய அவசர சட்டத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பா.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கேரள அரசின் இந்த புதிய சட்டம் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. இந்த சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கேரள அரசின் இந்த புதிய சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மது பார் ஊழல் வழக்கில் காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலாவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளதற்கும் சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :