டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீட்டில் பாஜகவினர் தாக்குதல்
டெல்லி அரசிடமிருந்து நிலுவைத் தொகை கோரிய மேயர்களையும், நகராட்சி ஊழியர்களையும் கொலை செய்ய ஆம் ஆத்மி சதி செய்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக பாஜகவினர், துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீட்டின் அருகே இன்று போராட்டம் நடத்தினர்.போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் திடீரென மணீஷ் சிசோடியாவின் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாஜகவினர் திடீரென சிசோடியாவின் வீட்டைச் சுற்றியுள்ள தடுப்புகளை அகற்றி சிசோடியாவின் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவினருக்கு டெல்லி காவல்துறையும் இச்செயலில் உதவியுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த டெல்லி பாஜக துணைத் தலைவர் அசோக் கோயல், பாஜக மேயர்கள் மற்றும் பிற நிறுவனத் தலைவர்களைக் கொல்லும் சதித்திட்டத்திலிருந்து கவனத்தைத் திசை திருப்பவே ஆம் ஆத்மி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிவித்திருக்கிறார்..
You'r reading டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீட்டில் பாஜகவினர் தாக்குதல் Originally posted on The Subeditor Tamil
More India News