கேரளாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்... முதல்வர் பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்றும், யாரிடமிருந்தும் ஒரு நயா பைசா கூட வாங்க மாட்டோம் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.இந்தியாவிலேயே தற்போது கேரளாவில் தான் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. தினமும் சராசரியாக 5,500 பேருக்குமேல் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல தினமும் சராசரியாக 30க்கும் மேற்பட்டோர் மரணமடைந்து வருகின்றனர். இன்று மட்டும் 5,949 பேருக்கு கொரோனா நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோய் பாதித்து சிகிச்சையில் இருந்த 32 பேர் இன்று மரணமடைந்தனர்.

இதையடுத்து இதுவரை மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,594 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6.65 லட்சத்தைத் தாண்டிவிட்டது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், கேரளாவில் நோய் பரவல் அதிகரித்து வருவது கேரள சுகாதாரத் துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே வரும் நாட்களில் கேரளாவில் நோய் பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகக் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருவதால் நோய் மேலும் பரவக்கூடும் என்றும், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் இன்று நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நோய் பரவலைக் கட்டுப்படுத்த கேரள சுகாதாரத் துறை கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் கவனமாக இருந்தால் மட்டுமே நோயை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும்.

கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகத் தெரிகிறது. தடுப்பூசி தயாராகி விட்டால் கேரளாவுக்கு எந்த அளவுக்கு அது கிடைக்கும் என்று தெரியாது. ஆனாலும் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடப்படும் என்பதை உறுதியாக நான் கூறுகிறேன். எந்தக் காரணம் கொண்டும் யாரிடமிருந்தும் தடுப்பூசிக்காக நயா பைசா கூட வாங்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds

READ MORE ABOUT :