கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு 28 வருடங்களுக்குப் பின் இன்று தீர்ப்பு

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. 28 வருடங்களுக்கு முன் கோட்டயத்தில் நடந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய சிபிஐ 2 பாதிரியார், ஒரு கன்னியாஸ்திரி உட்பட 3 பேரைக் கைது செய்தது. இந்த வழக்கில் திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.கோட்டயத்தைச் சேர்ந்தவர் தாமஸ். இவரது மனைவி லீலா. இவர்களது மகள் அபயா. கன்னியாஸ்திரியான இவர், கோட்டயத்தில் உள்ள பயஸ் டென்த் என்ற கன்னியாஸ்திரி ஆசிரமத்தில் தங்கி அங்கு உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 1992 மார்ச் 27ம் தேதி ஆசிரமத்தில் உள்ள கிணற்றில் அபயா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து முதலில் உள்ளூர் போலீசாரும், பின்னர் குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அபயா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி வழக்கை முடித்தனர். ஆனால் தங்கள் மகள் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கோரி அபயாவின் பெற்றோர் தாமஸ் மற்றும் லீலா இருவரும் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இதையடுத்து சிபிஐ விசாரிக்கக் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் தான் அபயா கொலை செய்யப்பட்டார் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.சிபிஐயின் தீவிர விசாரணையில் பாதிரியார்களான தாமஸ் கோட்டூர், ஜோஸ் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கன்னியாஸ்திரி செபி, அபயா தங்கியிருந்த ஆசிரமத்தில் தான் தங்கி இருந்தார். அவருக்கும், பாதிரியார்கள் இருவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்தது. பாதிரியார்கள் தாமஸ், ஜோஸ் இருவரும் அடிக்கடி ஆசிரமத்திற்கு வந்து சென்றனர். சம்பவத்தன்று இவர்கள் உல்லாசமாக இருந்ததை கன்னியாஸ்திரி அபயா பார்த்து விட்டார். இதனால் தான் 3 பேரும் சேர்ந்து அபயாவை கொலை செய்தனர் என்று சிபிஐ விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து மூன்று பேரையும் சிபிஐ கைது செய்தது. கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் 2 பாதிரியார்களும், கன்னியாஸ்திரியும் கைது செய்யப்பட்டது கேரளாவில் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் பின்னர் பாதிரியார் ஜோசை நீதிமன்றம் விடுவித்தது. இந்த வழக்கு திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் 28 வருடங்களுக்குப் பின் இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds

READ MORE ABOUT :