கர்நாடகா, கேரளா எல்லையில் திருமண கோஷ்டி பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி... 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்...!

கர்நாடகா, கேரளா எல்லையில் உள்ள பாணத்தூர் என்ற இடத்தில் திருமண கோஷ்டி சென்ற பஸ் வீட்டின் மீது கவிழ்ந்து 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் ஈஸ்வரமங்கலம் என்ற இடத்தை சேர்ந்த ஒரு திருமண கோஷ்டியினர், கேரள எல்லையில் உள்ள செத்துகயம் என்ற இடத்தில் நடைபெறும் திருமணத்திற்காக ஒரு பஸ்சில் சென்றனர். இந்த பஸ்சில் திருமண வீட்டைச் சேர்ந்த 65 க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

இந்நிலையில் இன்று நண்பகல் 12 மணியளவில் இந்த பஸ் கேரள எல்லையில் உள்ள பாணத்தூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு வளைவில் பஸ் வேகமாகத் திரும்பிய போது எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்து ஒரு வீட்டின் மீது கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த பெரும்பாலானோர் காயமடைந்தனர். இது குறித்து அறிந்ததும் காசர்கோடு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரேயஸ் (13), ரவிச்சந்திரா (40), இவரது மனைவி ஜெயலட்சுமி (38) ராஜேஷ் (45) உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.படுகாயம் அடைந்த அனைவரும் காஞ்சங்காடு பகுதியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பஸ் அதிவேகத்தில் வந்தது தான் விபத்திற்குக் காரணம் என போலீசார் கூறினர். பஸ் கவிழ்ந்த வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததால் மேலும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து காஞ்சங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் மரணமடைந்தவர்களுக்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds

READ MORE ABOUT :