சபரிமலையில் கடந்த வருட வருமானம் ₹ 300 கோடிக்கு மேல் இந்த வருடம் இதுவரை ₹ 15 கோடி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த வருடம் ₹ 300 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்தது. ஆனால் இந்த வருடம் இதுவரை ₹ 15 கோடி மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது. இதனால் கேரள அரசிடம் திருவிதாங்கூர் தேவசம் போர்டு 100 கோடி உதவி தருமாறு கேட்டுள்ளது. இந்தியாவிலேயே திருப்பதி கோவிலுக்கு அடுத்தபடியாக கேரளாவிலுள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குத் தான் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். ஆனால் திருப்பதி போல தினமும் சபரிமலை கோவில் நடை திறக்கப்படுவது கிடையாது. ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் மட்டுமே நடை திறந்திருக்கும். இது தவிர மண்டல காலத்தில் தொடர்ச்சியாக 41 நாட்களும், மகரவிளக்கு காலத்தில் 20 நாட்களும் மட்டுமே நடை திறந்திருக்கும்.

வருடத்திற்கு 140 நாட்களை விட குறைவான நாட்களில் தான் சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும். ஆனாலும் வருடந்தோறும் சபரிமலைக்கு 2 கோடிக்கு மேல் பக்தர்கள் வருகின்றனர். இதனால் கோவிலுக்கு வருமானமும் அதிக அளவில் கிடைக்கிறது. ஒரு வருடத்தில் சராசரியாக ₹ 300 கோடிக்கு மேல் நேரடி வருமானம் வருகிறது. ஆனால் இவ்வருடம் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் வருகை குறைந்ததால் கோவில் வருமானமும் வெகுவாக குறைந்து விட்டது. வழக்கமாக மண்டல, மகரவிளக்கு காலத்தில் தான் சபரிமலையில் வருமானம் அதிக அளவில் கிடைக்கும். ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக 7 மாதங்கள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்த மண்டல, மகரவிளக்கு காலத்தில் இதுவரை 15 கோடி மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் சபரிமலை கோவில் மட்டுமில்லாமல் 1200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இதில் 1,000க்கும் மேற்பட்ட கோவில்களில் வருமானம் மிக மிக குறைவாகும். சபரிமலை கோவில் வருமானத்தை வைத்துத் தான் இந்த கோவில்களில் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சபரிமலையில் வருமானம் கடுமையாக குறைந்ததால் அரசிடம் 100 கோடி உதவி வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :