2 குழந்தைகளை தவிக்க விட்டு ஓட்டம் கள்ளக்காதலனுடன் இளம்பெண் கைது

11 மற்றும் 13 வயதுள்ள 2 குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டு இளம்பெண் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நடந்துள்ளது.திருவனந்தபுரம் மாவட்டம் ஆரியநாடு அருகே உள்ள பறண்டோடு என்ற பகுதியை சேர்ந்தவர் 32 வயதான இளம்பெண். இவர் தன்னுடைய 19வது வயதில் அதே பகுதியைச் சேர்த்த வேற்று மதத்தைச் சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதன் பின்னர் தன்னுடைய பெயரை மாற்றி கணவனின் மதத்தை இவர் ஏற்றுக் கொண்டார். இவர்களுக்கு தற்போது 13 மற்றும் 11 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த பெண்ணின் கணவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். வருடத்திற்கு ஒரு முறை ஊருக்கு வருவது வழக்கம். கடந்த வருடம் ஜனவரியில் துபாய் சென்ற இவர், இன்னும் ஒரு சில தினங்களில் விடுமுறையில் ஊருக்கு வர திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் இந்த இளம்பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஒரு வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டது.

இதையடுத்து இருவரும் ரகசியமாக அடிக்கடி சந்தித்து வந்தனர். இந்த விவரம் அந்தப் பெண்ணின் கணவனுக்கோ, அவரது உறவினர்களுக்கோ தெரியாது.இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் அந்த இளம்பெண் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் காணாததால் அந்த இளம் பெண்ணின் உறவினர்கள் ஆரியநாடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் தான் அந்த இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த வாலிபரின் வீட்டில் இருந்து இளம்பெண்ணை போலீசார் மீட்டனர்.

பின்னர் அவர்கள் இருவர் மீதும் குழந்தைகள் நலச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவரையும் 14 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :