கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு செல்பவர்களுக்கு திடீர் கட்டுப்பாடு

கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் பரவுவதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் இருந்து கர்நாடகா செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தங்கள் மாநிலத்திற்கு வரும் கேரளாவைச் சேர்ந்த அனைவரும் கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.இந்தியாவில் கேரள மாநிலத்தில் தான் கொரோனா நோயாளி முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டார். கொரோனாவின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவிலுள்ள வுஹானில் இருந்து கேரள வந்த ஒரு எம்பிபிஎஸ் மாணவருக்கு இந்த நோய் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் பின்னர் இந்தியாவில் மற்ற மாநிலங்களில் நோய் அதிகமாகப் பரவிய போது கேரளாவில் மட்டும் நோய் பரவல் கட்டுக்குள் இருந்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மற்ற பெரும்பாலான மாநிலங்களில் நோய் பரவல் குறைந்து வரும் நிலையில் கேரளாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் அதிக அளவில் உள்ளது. தினமும் சராசரியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவி வருகிறது. இதுவரை இந்த மாநிலத்தில் நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டி விட்டது.

தற்போதும் 60,500க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை நோய் பாதித்து மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டி விட்டது.கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது மத்திய சுகாதாரத் துறைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோய் பரவலை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை கேரள அரசிடம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் மத்திய சுகாதாரக் குழு கேரளாவுக்கு பல முறை நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தியது. இந்நிலையில் கேரளாவில் நோய் பரவி வருவதால் அங்கிருந்து வருபவர்களுக்கு மகாராஷ்டிர மாநில அரசு சமீபத்தில் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அம்மாநில அரசு சமீபத்தில் அறிவித்தது. இதேபோல தற்போது கர்நாடக மாநில அரசும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு திடீர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கேரளாவில் இருந்து வருபவர்கள் 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சான்றிதழ் வைத்திருப்பவர்களை மட்டுமே ஓட்டல்கள் லாட்ஜ்கள் ஆகியவற்றில் அனுமதிக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :