கொரோனா நெகட்டிவ் சான்றிதழுக்காக கட்டிப்போட்டு பலாத்காரம்... பொய் புகார் கொடுத்த இளம்பெண் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வாங்க சென்ற இளம்பெண்ணை சுகாதார ஆய்வாளர் கட்டிப் போட்டு பலாத்காரம் செய்ததாகக் கூறப்பட்ட புகார் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பொய்யான புகார் என தெரிய வந்ததை தொடர்ந்து இளம்பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரளாவில் கடந்த 5 மாதங்களுக்கு முன் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் செல்லும் வழியில் கொரோனா பாதித்த இளம்பெண்ணை ஆம்புலன்ஸ் டிரைவர் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து நவுஷாத் என்ற அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் திருவனந்தபுரம் அருகே கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வாங்குவதற்காகச் சென்ற ஒரு இளம்பெண்ணைச் சுகாதார ஆய்வாளர் கட்டிலில் கட்டிப் போட்டு பலாத்காரம் செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த சம்பவமும் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து சுகாதார ஆய்வாளர் பிரதீப் குமார் என்பவரைக் கைது செய்தனர். இதன் பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு முறை ஜாமீன் மனுத் தாக்கல் செய்த போதிலும் அவரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனால் 77 நாட்கள் சிறையில் இருந்த பின்னரே அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இதற்கிடையே போலீசாரின் தீவிர விசாரணையில் அந்த இளம்பெண்ணின் புகார் பொய்யானது எனக் கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அந்த இளம்பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், சுகாதார ஆய்வாளர் பிரதீப் குமார் மீது கொடுத்தது பொய்யான புகார் தான் என்று அவரும் ஒப்புக் கொண்டார். உறவினர்களின் வற்புறுத்தல் காரணமாகவே பொய் புகார் கொடுத்ததாக அவர் போலீசில் தெரிவித்தார். இதற்கிடையே சுகாதார ஆய்வாளர் பிரதீப் குமார் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், இளம்பெண்ணின் சம்மதத்துடன் தான் உறவில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்திருந்தார். இதை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் பொய் புகார் கொடுத்த இளம்பெண் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. சுகாதார ஆய்வாளர் செய்தது தவறு தான் என்றாலும், அவருக்கு எதிராகப் பொய் புகார் கொடுத்ததின் காரணமாகச் சுகாதாரத் துறை ஊழியர்கள் மீது களங்கம் ஏற்பட்டு விட்டது. எனவே இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :