இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது.. 5 மாநிலங்களில் அதிக பாதிப்பு..

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளாவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் ஒரு கோடியே 10 லட்சம் பேருக்குப் பாதித்திருக்கிறது. இதில் ஒரு கோடியே 7 லட்சம் பேர் வரை குணம் அடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரு லட்சத்து 56 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த பிப்.11ம் தேதியன்று இந்தியாவில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேராக இருந்தது.

ஆனால், 10 நாளில் இது ஒரு லட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது 10.5 சதவீதம் அதிகரித்திருக்கிறது. மகாராஷ்டிரா, கேரளா, சட்டீஸ்கர், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில்தான் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, சிகிச்சையில் உள்ளவர்களில் 74 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, கேரள மாநிலங்களில் உள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பரவிய இந்த வைரஸ் நோய், ஆரம்பத்தில் தினமும் சுமார் 5 ஆயிரம் பேருக்குப் பாதித்தது. கடந்த அக்டோபர் மாதத்திற்குப் பிறகு நோய்ப் பரவுவது குறையத் தொடங்கியது. தற்போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் பெரிய பாதிப்பு இல்லை.தமிழகத்தில் கொரானா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 49 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4100 என்ற அளவில் குறைந்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பரவல் நீடிக்கிறது.

தமிழகத்தில் 100 பேருக்குப் பரிசோதனை மேற்கொண்டால் அதில் 0.9 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளதாகச் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் தினமும் சராசரியாக 140-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும், தொற்று எங்கிருந்து பரவுகிறது எனக் கண்டறிந்து அங்குப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :