அரசியல் வெற்றியாளர்... ரகசியம் சொல்லும் நீர்வளத்துறை அமைச்சர்
வெற்றியாளர் ரகசியம் சொல்லும் நீர்வளத்துறை அமைச்சர்
சர்ச்சைக்குரிய தலைவராக இருந்தால்தான் வெற்றியாளராக இருக்க முடியும் என்று கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.
தேசிய மாணவர் அமைப்பு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் சிறப்புரையாற்றினார். அப்போது "அதிக வேலை செய்தால் அதிக தவறுகள் நடக்கும். குறைவாக வேலை செய்தால் குறைவான தவறுகள் நடக்கும் வேலையே செய்யவில்லை என்றால் தவறு நடக்காது" என்றார்.
“அமைதியாக வீட்டிலேயே இருந்து விட்டால் எதுவும் நடக்காது. சர்ச்சைக்குரிய தலைவராக இருந்தால் மட்டுமே வெற்றியாளராக முடியும். யார் ஒருவர் தொடர்ந்து போராட்டங்களில் முன்னணியில் உள்ளாரோ அவர் மட்டுமே அங்கீகாரம் பெற முடியும்” எனவும் டி.கே.சிவக்குமார் பேசியுள்ளார்.
தற்போது கர்நாடக காங்கிரசில் பல பிரச்சனைகள் இருந்துவரும் நிலையில் சிவக்குமாரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படு்தியுள்ளது.
You'r reading அரசியல் வெற்றியாளர்... ரகசியம் சொல்லும் நீர்வளத்துறை அமைச்சர் Originally posted on The Subeditor Tamil
More India News