நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் கன்னையா குமார்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் ஜே.என்.யு. மாணவர் கன்னையா குமார்
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவரான கன்னையா குமார் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பீகார் மாநிலத்தில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜே.என்.யு. மாணவர் கன்னையா குமார் போட்டியிடுகிறார்.
கன்னையாகுமார் பீகார் மாநிலம் பெகுசராய் லோக்சபா தொகுதியில் இருந்து போட்டியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு ஜவகர்லால் நேரு பல்கலையின் மாணவர் சங்கத்தின் தலைவராகத் கன்னையா குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர், தனது பள்ளிக்காலத்திலேயே இடதுசாரி பண்பாட்டு குழுவான இந்திய மக்கள் நாடக சங்கத்தின் நாடகங்களிலும் அது தொடர்பான செயற்பாடுகளிலும் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
You'r reading நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் கன்னையா குமார் Originally posted on The Subeditor Tamil
More India News