ரூ.25 ஆயிரம் கோடி ஊழல் வழக்கு.. சரத்பவார் கைது செய்யப்படுவாரா? அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜர்

மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், சரத்பவா இன்று பிற்பகல் ஆஜராகிறார். ரூ.25 ஆயிரம் கோடி கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கில் விசாரிக்கப்படும் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

மகாராஷ்டிர முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் சரத்பவார். மூத்த அரசியல் தலைவரான இவர் காங்கிரசில் இருந்து பிரிந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி நடத்தி வருகிறார். மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கியில் ரூ.25 ஆயிரம் கோடி கடன் மோசடிகள் தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கில் சரத்பவார் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணைக்காக இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆஜராகுமாறு சரத்பவாருக்கு அமலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பியிருக்கின்றனர். இதைக் கண்டித்து. தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் நேற்று மும்பையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய, மாநில பாஜக அரசுகளை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் 21ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சரத்பவார் மீது பொய் வழக்கு போட்டு அவரை முடக்க முயற்சிப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கிடையே, சரத்பவாரிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்திய பின்பு அவரை கைது செய்யவும் வாய்ப்புள்ளதாகக கூறப்படுகிறது. அப்படி கைது செய்தால் அவரது கட்சியினர் வன்முறையில் ஈடுபடக்கூடும் என்பதால், தெற்கு மும்பையில் பல பகுதிகளில் போலீசார் 144 தடையுத்தரவு போட்டிருக்கின்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
amithabachan-test-covid-19-positive
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கொரோனா
mumbai-municipal-corporation-introduced-rs-10-meal-for-its-employees
மும்பை மாநகராட்சியில் 10 ரூபாய் சாப்பாடு.. சிவசேனாவின் அம்மா உணவகம்..
dri-seized-42-kg-of-smuggled-gold-during-raid-in-raipur-kolkata-and-mumbai
மத்திய வருவாய் துறை ரெய்டு.. 42 கிலோ தங்கம் சிக்கியது..
marathi-singer-geeta-mali-dies-in-road-accident-on-mumbai-agra-highway
பிரபல மராத்தி பாடகி சாலை விபத்தில் சாவு..
shivasena-raut-meets-sharad-pawar-at-mumbai
மகாராஷ்டிர இழுபறி.. சரத்பவாருடன் சஞ்சய் ராவத் சந்திப்பு
mumbai-beggar-run-over-by-train-had-rs-8-77l-in-fds-coins-worth-rs-1-75l
வங்கியில் ரூ.10 லட்சம் வைத்திருந்த பிச்சைக்காரர் ரயிலில் அடிபட்டு சாவு..
sc-stops-tree-cutting-in-mumbais-aarey-till-next-hearing-on-october-21
மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்டத் தடை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி..
midnight-drama-at-mumbais-aarey-as-authorities-begin-hacking-trees-activists-storm-site
மெட்ரோ ரயில் பணிமனை கட்ட 2600 மரங்களை வெட்டுவதா? மும்பையில் நள்ளிரவில் மறியல்..
ed-steps-in-to-probe-money-laundering-in-pmc-bank-case-hdil-promoters-on-radar
மும்பை வங்கி முறைகேடு.. 6 இடங்களில் இ.டி. ரெய்டு.. எச்.டி.ஐ.எல் இயக்குனர்கள் கைது
bjp-shiv-sena-seat-sharing-pact-likely-to-be-announced-at-mumbai-today
மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் பாஜக - சிவசேனா உடன்பாடு. முரண்டுபிடித்த சிவசேனா பணிந்தது?
Tag Clouds