ஜடாமுனி... பிணம்... சிவபக்தி ... அகோரிகளின் வாழ்கை முறை

The Agoris life style

by Gokulakannan.D, Mar 27, 2019, 22:03 PM IST

சாமியார் போர்வையில் ஊரை ஏமாற்றுபவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். ஆனால் எதையும் கடைபிடிக்காத தீவிர துறவறத்தில் இருக்கும் உண்மையான சாமியார்களும் இருக்கிறார்கள். அவர்கள்தான் அகோரிகள்.

ஜடாமுடியுடனும், உடை அணிந்தும், அணியாமலும், கைகளில் மனித மண்டை ஓடுகளுடன் பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக இருப்பார்கள். இவர்களை வடஇந்திய புண்ணிய ஸ்தலங்களில் அதிகம் பார்க்கலாம். சிலர் மக்களிடம் இருந்து விலகி குகைகளிலோ, காடுகளிலோ, பாலைவனங்களிலோ வாழ்வார்கள்.

இவர்கள் மேற்கொள்ளும் சடங்கு முறைகளையும் ,வழிபட்டு முறைகளையும் ஊரை ஏமாற்றும் போலி சாமியார்களால் செய்ய இயலாது. கருப்பு நிறமுள்ள சிவபக்தி உடைய கருப்பு உடையணிந்த நீண்ட முடி கொண்ட அகோரிகளை நீங்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். அவர்கள் எப்பொழுதும் போதையில்தான் இருப்பார்கள், சிவபெருமானையும் அவரின் அழிக்கும் துணையான காளியையும்தான் வணங்குவார்கள் . அகோரிகளின் நம்பிக்கைகளின் படி காளி உடலுறவில் திருப்தி எதிர்பார்ப்பதால் அவர்கள் அதற்கு பொருத்தமான பிணம் ஒன்றை தேடி அதனுடன் உறவு கொள்கின்றனர்.

அகோரிகளுக்கு மற்றுமொரு விசித்திரமான சடங்கு முறை உள்ளது. அதுதான் பிணங்களுக்கு மத்தியில் உறவு கொள்வது. இவ்வாறு உறவு கொள்வது அவர்களுக்கு பல அற்புத சக்திகளை அளிப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். மேளங்கள் முழங்க மந்திரங்கள் ஓத இந்த சடங்கு இரவு நேரத்தில் இறந்த உடல்களுக்கு மத்தியில் நடைபெறுகிறது .இந்த சடங்கில் ஈடுபடும் பெண் மாதவிடாய் காலத்தில் இருக்க வேண்டியது அவசியம். அதேசமயம் கட்டாயப்படுத்தி இந்த சடங்கை செய்யமுடியாது. பலமணி நேரங்களுக்கு நீடிக்கும் . இப்படி செய்தால் சகலவித சக்திகள் கிடைக்கும் எனது அவர்களின் நம்பிக்கை.

பசு மற்றும் நாயுடன் உணவை பகிர்ந்து சாப்பிடுவது அவர்களுக்கு பிடிக்காது, மாறாக பிணங்களை எரிக்கும் இடத்தில் அமர்ந்து ஒரே கிண்ணத்தில் விலங்குகளுடன் உணவு உண்பார்கள்.விலங்குகள் தங்கள் உணவை அசுத்தப்படுதுவதாக அவர்கள் ஒருபோதும் நினைக்க மாட்டார்கள். அவர்களின் ஒரே நோக்கம் ஈசனை அடைவது மட்டும்தான்.
அகோரியாக விரும்பும் ஒருவர் முதலில் தன் குருவிடம் இருந்து மண்டை ஓட்டை பெற வேண்டும் அதற்கு பிறகுதான் தன்னுடைய அகோரி வாழ்க்கையை தொடங்க முடியும். அகோரிகளிடம் இருக்கும் மர்மமான மருந்துகள் உலகம் முழுவதும் இருக்கும் விஞஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாக இருக்கிறது. விஞ்ஞானத்தால் கூட குணப்படுத்த முடியாத நோய்களை அகோரிகளால் குணப்படுத்த முடியும். இதனை அவர்கள் மனித எண்ணெய் என்று கூறுகிறார்கள்.

 

You'r reading ஜடாமுனி... பிணம்... சிவபக்தி ... அகோரிகளின் வாழ்கை முறை Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை