சீனாவில் பையுடன் சோதனை கருவிக்குள் நுழைந்த பெண்ணால் பரபரப்பு
பீய்ஜிங்: பொருட்களை சோதனை செய்யும் கருவிக்குள் தன்னுடைய பையுடன் பெண் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சீனாவின் டோங்குவான் நகரின் ரயில் நிலையத்தில், நம்மூரில் இருப்பது போன்ற பொருட்களை சோதனை செய்யும் கருவி உள்ளது. இங்கு, ரயில் நிலையத்தில் பொருட்களை சோதனையும், அதன் உரிமையாளர்களையும் தனித்தனியாக சோதனை செய்த பிறகே உள்ளே நுழைய முடியும்.
இந்நிலையில், அந்தப் பெண் தான் எடுத்து வந்த பையை சோதனைக்காக கருவியில் வைத்ததுடன் அவரும் கருவிக்குள் சென்றுவிட்டார். இதைக்கண்டு ஊழியர்களும், பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த பெண் வெளியே வந்த பிறகு விசாரித்த பிறகு, எங்கு தனது கைப்பையை விட்டுப்போகக்கூடாது என்பதற்காக தானும் நுழைந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இந்த காட்சி வீடியோவாக மீடியாக்களில் வெளியானதை அடுத்து, சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.
You'r reading சீனாவில் பையுடன் சோதனை கருவிக்குள் நுழைந்த பெண்ணால் பரபரப்பு Originally posted on The Subeditor Tamil
More Special article News