70 வயது முதியவருக்கு குவியும் பாராட்டு..! என்ன செய்தார் தெரியுமா??

by Logeswari, Feb 22, 2021, 21:50 PM IST

ராணிப்பேட்டையை சேர்ந்த 70 வயது முதியவர் தன் சேமிப்பு பணத்தை யோக நரசிம்மர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்ம சாமி திருக்கோவிலில் 15 ஆண்டுகளாக ரோப்கார் பணிகள் நடைபெற்று வருகிறது.

பணத்தின் பற்றாக்குறையால் பணிகள் சற்று கால தாமதமாக நிகழ்ந்து வருகின்ற வேளையில் சோளிங்கர் அடுத்த எரும்பி கிராமத்தை சேர்ந்த 70 வயது முதியவர் தான் சேமித்து வைத்திருந்த 10,000 ரூபாயை யோக நரசிம்மர் கோவிலில் நடைப்பெற்று வரும் பணிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். அப்போது கோவில் கண்காணிப்பாளர் விஜயன் மற்றும் கிஷோர் ஆகியோர் உடனிருந்தனர். அம்முதியவரை தொடர்ந்து பக்தர்கள் தங்களால் முடிந்த நன்கொடையை கோவிலுக்கு செலுத்தி வருகின்றனர்.

You'r reading 70 வயது முதியவருக்கு குவியும் பாராட்டு..! என்ன செய்தார் தெரியுமா?? Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை