ஏப்ரல் 7ஆம் தேதி முதல் தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா!

இந்த ஆண்டின் ஐபிஎல் சீசன் வருகின்ற ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Jan 22, 2018, 23:02 PM IST

இந்த ஆண்டின் ஐபிஎல் சீசன் வருகின்ற ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பங்கேற்காத சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இந்த ஆண்டு பங்கேற்க உள்ளது. வீரர்கள் ஏலம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வருகின்ற ஏப்ரல் 7ஆம் தேதி முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முழு அட்டவணையும் இந்த வாரத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் போட்டியில் நடப்புச் சாம்பியனான மும்பை இண்டியன்ஸ் அணி விளையாடுவது உறுதியாகிவிட்டது. அதேபோல் இந்த வருடம் இரண்டு ஆட்டங்கள் நடைபெறும் நாட்களில், முதல் போட்டி 05.30 மணிக்கும், அடுத்தப் போட்டி 7 மணிக்கும் தொடங்கவுள்ளது.

இதுவரையில் முதல் போட்டி 4 மணிக்கும், அடுத்தப் போட்டி இரவு 8 மணிக்கும் தொடங்கும். தற்போதுள்ள அட்டவணைப் படி, முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கும் நேரத்தில், இரண்டாவது போட்டி முதல் இன்னிங்ஸ் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading ஏப்ரல் 7ஆம் தேதி முதல் தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா! Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை