தோனிக்கு ஓய்வு இன்றைய போட்டியை வெல்வாரா சுரேஷ் ரெய்னா!
Dhoni less Csk won the toss and opt to bowl
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் 44வது ஐபிஎல் லீக் ஆட்டம் இன்று சென்னை சேப்பக்கத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற சுரேஷ் ரெய்னா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறவுள்ள 44வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. உலக கோப்பை மற்றும் முதுகு வலி காரணமாக இந்த போட்டியில் தோனிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. சென்னை அணியின் இன்றைய கேப்டனாக செயலாற்றவுள்ள சுரேஷ் ரெய்னா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
முதலில் பேட்டிங் செய்யவுள்ள மும்பை அணி 180 ரன்களுக்கு ஸ்கோர் செய்துவிட்டால், சென்னை அணியால் அதனை சேஸ் செய்ய தடுமாறும் என்ற முனைப்புடன் அதிரடியாக ஆடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த போட்டியில் தோனி ஆடாமலேயே சென்னை அணி வாட்சனின் அதிரடியால் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியிலும் வாட்சன், டுப்ளசிஸ் மற்றும் ரெய்னாவின் ஆட்டம் சென்னை அணிக்கு மிகவும் அவசியம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
மும்பை அணி இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.
இந்த போட்டியில் சென்னை அணியை வெல்லும் பட்சத்தில் மும்பை அணி டெல்லி அணியை பின்னுக்குத் தள்ளி 2ம் இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.
இதற்காக தான் காத்திருக்கிறோம் - உலகக்கோப்பை குறித்து பேசும் இயான் மோர்கன்
You'r reading தோனிக்கு ஓய்வு இன்றைய போட்டியை வெல்வாரா சுரேஷ் ரெய்னா! Originally posted on The Subeditor Tamil
More Sports News