ஓர் ஆண்டு இடைவெளிக்குப்பின் களம் திரும்புகிறார் சுரேஷ் ரெய்னா

by Rahini A, Feb 16, 2018, 09:35 AM IST

இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களுள் ஒருவரான சுரேஷ் ரெய்னா சுமார் ஓராண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த ஒரு நாள் தொடர் போட்டியில் இதுவரையில் ஐந்து போட்டிகள் நிறைவடைந்துள்ளது. தொடரை இந்திய அணி கைப்பற்றியபோதும் இன்னும் ஒரு போட்டியில் தென்னாப்பிரிகாவுக்கு எதிரானப் போட்டியில் இந்தியா பங்கேற்க உள்ளது. இதையடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 போட்டிகளிலும் இந்திய அணி பங்கேற்க உள்ளது.

இந்நிலையில் சுமார் ஓராண்டு காலத்துக்குப் பின்னர் தற்போது மீண்டும் களத்தில் இறங்க உள்ளார் இந்திய அணியின் இடதுகை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா. இறுதியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரானப் போட்டியில் பங்கேற்றவர், தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 போட்டிகளில் பங்கேற்க தென்னாப்பிரிக்க பயணமாகியுள்ளார். இதை அதிகாரப்பூர்வமாகத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார்.

ஆல் தி பெஸ்ட் ரெய்னா..!

You'r reading ஓர் ஆண்டு இடைவெளிக்குப்பின் களம் திரும்புகிறார் சுரேஷ் ரெய்னா Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை