ஐபிஎல் போட்டிக்காக ஓய்வு எடுப்பாரா விராட் கோலி?!

ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகள் பங்கேற்கவுள்ள முத்தரப்பு டி20 தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஓய்வு எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Feb 23, 2018, 10:35 AM IST

ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகள் பங்கேற்கவுள்ள முத்தரப்பு டி20 தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஓய்வு எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் முடிந்தவுடன் இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு டி-20 தொடரில் பங்கேற்கிறது. இந்த முத்தரப்பு தொடரில் இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் மோதுகின்றன இந்த டி-20 தொடர் மார்ச் 6-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

முதல் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன. ஓய்வு இல்லாமல் தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவதால் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு தொடரில் விருப்பப்பட்டால் விராட் கோலி ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

இதுகுறித்து கிரிக்கெட் வாரிய உறுப்பினர் ஒருவர் கூறுகையில், “இந்த சீசனில் கடைசி தொடர் என்பதால் விராட் கோலி விளையாடவே விரும்பலாம். இதன்பிறகு ஐ.பி.எல். போட்டி தான் இருக்கிறது. இலங்கையில் நடைபெறும் போட்டியில் இருந்து விளையாடுவதா? வேண்டாமா? என்பது பற்றி விராட் கோலி தான் முடிவு செய்ய வேண்டும்” இவ்வாறு கூறியுள்ளார்.

You'r reading ஐபிஎல் போட்டிக்காக ஓய்வு எடுப்பாரா விராட் கோலி?! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை