தமிழ் தலைவாஸ் அணியை பழி வாங்கியது பெங்கால் வாரியர்ஸ் அணி

விவோ புரோ கபடிப் போட்டியில், பரபரப்பான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியை, பெங்கால் வாரியர்ஸ் அணி நான்கு புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

புரோ கபடியின் 5-வது சீசன் போட்டிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 123ஆவது போட்டி, பி மண்டலத்தில் உள்ள தமிழ் தலைவாஸ் அணிக்கும் பெங்கால் வாரியர்ஸ் அணிக்கும் நடைபெற்றது.

இப்போட்டியில், முதல் பகுதியில் தமிழ் தலைவாஸ் அணி 14 புள்ளிகளையும், பெங்கால் வாரியர்ஸ் அணி 18 புள்ளிகளையும் பெற்றது.

Pro kabaddi

முதல் பாதியில் பெங்கால் வாரியர்ஸ் அணி தரப்பில், அபாரமாக ஆடிய மனீந்தர் சிங் 9 புள்ளிகளை பெற்றுத் தந்தார். அதேபோல, சுர்ஜீத் சிங் 3 புள்ளிகளையும், ஸ்ரீகாந்த் தேவ்தியா 2 புள்ளிகளையும் பெற்றனர்.

அதேபோல் தமிழ் தலைவாஸ் அணி தரப்பில் அஜய் தாக்கூர் 6 புள்ளிகளைப் பெற்றுத் தந்தார். மேலும், கே.பிரபஞ்சன் 5 புள்ளிகளை பெற்றுத் தந்தார்.

இரு அணிகளும் ரெய்டுகள் மூலமாக 11 புள்ளிகளை பெற்றனர். ஆல் அவுட் மூலம் பெங்கால் அணி 2 புள்ளிகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

பின்னர் இரண்டாவது பாதியில் முன்னிலை பெற இரு அணிகளும் கடுமையாக போராடின. பின் பாதியின் ஒரு கட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 22 புள்ளிகளுடனும், தமிழ் தலைவாஸ் அணி 19 புள்ளிகளுடனும் இருந்தது.

பிற்பாதி ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியின் கை சிறிது ஓங்கி இருந்தது. தமிழ் தலைவாஸ் அணியின் பிரபஞ்சன் ஒரே ரெய்டில் 2 புள்ளிகள் பெற்றார். அதே சமயம் வினீத் குமார் 11 ரெய்டுகளில் 9 வெறுமனே திரும்பினார். இரண்டில் டேக்கிள் ஆனார்.

பெங்கால் வாரியர்ஸ் அணியின் மனீந்தர் சிங் இந்த ஆட்டத்தில் 12 புள்ளிகளை பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது. இறுதி கட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி வீரர் புபேந்தர் சிங் 3 வீரர்களை அவுட் ஆக்கியதுடன் ஆல் அவுட் மூலம் 2 புள்ளிகளை சேர்த்துப் பெற்றார்.

இதனால் தமிழ் தலைவாஸ் அணி பின்னடைவைச் சந்தித்தது. கடைசி நேரத்தில் தமிழ் தலைவாஸ் அணி வீரர் அஜய் தாக்கூர் 3 புள்ளிகளை பெற்றபோதிலும் அணியை வெற்றிபெற வைக்க முடியவில்லை.

இறுதியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 34 – 30 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை தோற்கடித்தது. ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி ஒரு புள்ளிகள் வித்தியாசத்தில் பெங்காள் வாரியர்ஸ் அணியை தோற்கடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பெங்கால் அணி ரெய்டு மூலமாக 20 புள்ளிகளையும் டேக்கிள் மூலமாக 10 புள்ளிகளையும் பெற்றது. ஆல் அவுட் மூலமாக 4 புள்ளிகளை பெற்றது.

தமிழ் தலைவாஸ் அணி ரெய்டு மூலம் 25 புள்ளிகளை பெற்றபோதிலும், டேக்கிள் மூலமாக வெறும் 5 புள்ளிகளை மட்டுமே பெற்றது. ஒரு முறை கூட எதிரணியை ஆல் அவுட் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
ipl-suspended-due-to-corona-crisis
வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி - ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு!
maradona-was-in-agony-for-the-12-hours-leading-up-to-his-death
புகழ்பெற்ற கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம் – அதிர்ச்சி தகவல்!
sri-lanka-wins-last-test-against-bangladesh-captured
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இலங்கை
ipl-cricket-will-hyderabad-beat-mumbai
மும்பை இந்தியன்ஸ் அணியை சுட்டெரிக்குமா ஐதராபாத் சன்ரைசர்ஸ்…?
warner-may-not-get-a-chance-in-playing-11-also-in-the-coming-matches
கேப்டன் பதவி பறிப்பை அடுத்து வீட்டுக்கு அனுப்ப பிளான்! டேவிட் வார்னருக்கு செக்!
suryakumar-yadav-shares-an-adorable-kiss-with-his-wife
கேமிரா இருப்பதை மறந்து தேவிஷா ஷெட்டிக்கு மும்பை அணி வீரர் முத்தம்...! இணையத்தில் வைரல்
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
ravichandran-ashwin-s-wife-prithi-shares-family-s-ordeal-with-covid-19-urges-to-take-vaccine
``அது கஷ்டமாக இருந்தது'' - அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!
ipl-cricket-chennai-super-kings-won-by-7-wickets
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி
Tag Clouds