IPL தொடரில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி

by Ari, Apr 16, 2021, 06:04 AM IST

IPL கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

14 வது IPL கிரிக்கெட் தொடரின், 7-வது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வீ ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். 2 வது ஓவரில் ப்ரித்வீ ஷா 2 ரன்களுடன் கேட்ச் அவுட் ஆனார். ஷிகர் தவானும் 9 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ரஹானே 8 ரன்கள் எடுத்த நிலையில், போல்ட் ஆனார். அதனைத் தொடர்ந்து களம் இறங்கிய ரிஷப் பண்ட் 9 பவுண்டரிகளை பறக்கவிட்டு 51 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது.

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் மனன் வோக்ரா ஆகியோர் களமிறங்கினர். மனன் வோக்ரா 9 ரன்களிலும், ஜோஸ் பட்லர் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 4 ரன்களிலும், சிவம் துபே 2 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். டேவிட் மில்லர் அரை சதத்தை பதிவு செய்தது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து கிறிஸ் மோரிஸ் மற்றும் ஜெய்தேவ் உனத்கட் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கிறிஸ் மோரிஸ் 36 ரன்களும், ஜெய்தேவ் உனத்கட் 11 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் ராஜஸ்தான் அணி 19.4 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

You'r reading IPL தொடரில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை