ஓவருக்கு 7 பந்து - நடுவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட ஐபிஎல் தலைவர் எச்சரிக்கை

by Lenin, Apr 25, 2018, 19:49 PM IST

ஐபிஎல் போட்டிகளில் நடுவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 11-வது சீசனில் கள நடுவர்கள் அளிக்கும் பெரும்பாலான தீர்ப்புகள் சர்ச்சைகளாகவே உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ்-சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஒரே ஓவரில் 7 பந்துகள் வீசப்பட்டன.

சென்னை வீரர் ஷர்துல் தாகூர், ஹைதராபாத் வீரர் வில்லியம்சனுக்கு நோ-பாலாக (இடுப்புக்கு மேல் புல்டாஸ்) வீசினார். எளிதாக கணிக்கக் கூடிய இந்த தவறான பந்துவீச்சை (நோ-பால்) கள நடுவர்கள் இருவரும் கணிக்கவில்லை.

இதனால், அந்த பந்தை நோ-பாலாக நடுவர்கள் அறிவிக்கவில்லை. வேகப்பந்துகள் தலைக்கும் மேல் செல்லும் போது பவுன்சர் நோ-பாலாக அறிவிக்கப்படுவதில்லை, வைடுகளிலும் பல சர்ச்சைகள் மூண்டு வருகின்றன.

இந்நிலையில் ஐபிஎல் சேர்மன் ராஜிவ் சுக்லா நடுவர்கள் கவனம் சிதறாமல் பொறுப்புடன் பணியாற்றுமாறும், சர்ச்சையான முடிவுகளுக்கு போட்டி நடுவர் ஆலோசனை செய்து முடிவை பரிசீலனை செய்யலாம் என அறிவுரை வழங்கியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஓவருக்கு 7 பந்து - நடுவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட ஐபிஎல் தலைவர் எச்சரிக்கை Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை