இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலிக்கு ரூ.1 கோடி பரிசு

by Isaivaani, Dec 30, 2017, 18:56 PM IST

ஐதராபாத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜூக்கு ரூ.1 கோடி மற்றும் வீடு வழங்கி தெலுங்கான அரசு கவுரவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட்டில் கால் பதித்துள்ள மகளிர் அணி தங்களது திறமையின் மூலம், உலகிற்கு அறிமுகமாகி உள்ளனர். இதில், இந்தியாவையே பெருமைப்பட வைத்தவர் மிதாலி ராஜ். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ள மிதாலி ராஜ், கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை போட்டியில் இவரது தலைமையிலான இந்திய அணி 2வது இடத்தை பிடித்தது. 

அதனால், மிதாலி ராஜூக்கு தெலுங்கான அரசு பரிசுகளை அறிவித்துள்ளது.
மிதாலி ராஜை கவுரவிக்கும் வகையில், அவருக்கு தெலுங்கானா அரசு ரூ.1 கோடி வழங்கி உள்ளது. மேலும், 600 சதுர அடி வீட்டு மனையும் தெலுங்கானா விளையாட்டு அமைச்சகம் வழங்கி பாராட்டி உள்ளது.
இதேபோல், மிதாலிராஜ் பயிற்சியாளருக்கு ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You'r reading இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலிக்கு ரூ.1 கோடி பரிசு Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை