முதல் இன்னிங்ஸில் 335 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது தென் ஆப்பிரிக்கா!

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னின்ங்ஸில் தென் ஆப்பிரிக்கா அணி 335 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Jan 14, 2018, 20:03 PM IST

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னின்ங்ஸில் தென் ஆப்பிரிக்கா அணி 335 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதன் முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 335 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக மார்க்ரம் 94 ரன்களும், ஹசிம் அம்லா 82 ரன்களும், கேப்டன் ஃபாப் டு பிளஸ்ஸி 63 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதில் இந்திய அணி சில கேட்சுகளை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது. தொடந்து தனது முதல் இன்னிங்ஸை இந்திய அணி ஆடி வருகிறது.

You'r reading முதல் இன்னிங்ஸில் 335 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது தென் ஆப்பிரிக்கா! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை